Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»3 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் தமிழக ஜவுளித்துறை: தொழில்துறையினர் வேதனை
    வணிகம்

    3 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் தமிழக ஜவுளித்துறை: தொழில்துறையினர் வேதனை

    adminBy adminMay 4, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    3 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் தமிழக ஜவுளித்துறை: தொழில்துறையினர் வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு, செயற்கை இழை இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிப்பு, மானியங்களை வாரி வழங்கும் பிற மாநிலங்கள் உள்ளிட்ட காரணங்களால் தமிழக ஜவுளித்தொழில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் முதல் நூற்பாலை 1818-ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இன்று நாடு முழுவதிலும் 4,210 நூற்பாலைகளில் 5.5 கோடி ஸ்பிண்டல்(நூற்பு இயந்திரங்கள்) திறனுடன் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. 42 லட்சம் கைத்தறி, 33 லட்சம் விசைதறி, 53 லட்சம் ரோட்டார் திறனை இந்தியா கொண்டுள்ளது.

    இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. நூற்றாண்டு பழமைவாய்ந்தது. இருந்தபோதும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் போட்டியிட முடியாத நெருக்கடியான நிலை கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் நிலவுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்.டி.எப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: சர்வதேச சந்தையில் போட்டியிட போதுமான தொழில் கொள்கைளை மத்திய, மாநில அரசுகள் மாற்றி அமைக்க காலதாமதம் செய்வதே ஜவுளித்தொழில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதற்கு முக்கிய காரணமாகும். ஐந்து சதவீதம் பங்களிப்பை கொண்ட கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக கொள்கைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.

    சர்வதேச அளவில் மொத்தம் 410.84 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிப்படுகிறது. இதில் 153 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சர்வதேச அளவில் 38 சதவீதம் கொண்டு இந்தியா உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு அடிப்படை விலை கிடைக்க மத்திய அரசு குறைந்தபட்ச உதவி தொகை(எம்எஸ்பி) விலை நிர்ணயம் செய்த பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மாறாக இடைதரகர்களுக்கு கிடைத்ததால் விலை உயர்ந்து சர்வதேச விலையை விட இந்திய நூற்பாலைகள் 20 சதவீதத்திற்கு மேல் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதே போல் செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறையால்(கியூசிஓ-பிஐஎஸ்) 18 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு போட்டி மாநிலங்களுக்கு இணையாக தொழில் கொள்கை வகுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர். சுந்தரராமன் கூறியதாவது: தமிழ்நாட்டு ஜவுளித்தொழில் கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் 2020- 2022 நிலையான வளர்ச்சியை பதிவு செய்தது. அதற்கு பின் ஒரு பகுதி கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. திருப்பூர், கரூர் மாவட்டங்கள் சிறிய அளவிலான பணி ஆணைகள் பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு சிறந்த முறையில் ஏற்றுமதி செய்து வருகின்றன. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

    மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்கள் மின்கட்டணம் குறைவு, மானியம் வழங்குதல் போன்ற பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதனால் தமிழக ஜவுளித்தொழில்துறையினர் இத்தகைய மாநிலங்களுடன் போட்டியிட முடியாத சவாலான நிலை ஏற்பட்டுள்ளது. தவிர சர்வதேச விலையை விட இந்திய பருத்தி விலை தொடர்ந்து அதிகமாக உள்ளது.

    செயற்கை இழை ஜவுளித்தொழில் சிறந்த வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ள போதும், இந்தியாவில் செயற்கை இழை இறக்குமதி செய்ய அமல்படுத்தப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறைகளால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சாயமேற்றுதல் பணி விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் குஜராத் போன்ற மாநிலங்களில் இத்தகைய விதிமுறைகள் அதிகம் இல்லை. எனவே செலவு குறைவு என்ற காரணத்தால் தமிழ்நாட்டில் இருந்து பல கோடி மீட்டர் துணி குஜராத் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து செலவு அதிகரித்து உற்பத்தி செலவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்தய பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(டெக்ஸ்புரோசில்) துணை தலைவர் ரவிசாம் கூறியதாவது: பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் மாத இறுதி வரையாவது நீக்க வேண்டும். பருத்தி விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறை ஏற்புடையதல்ல. அவற்றை நீக்கினால் செயற்கைஇழை ஜவுளித்தொழில் மிக சிறப்பான வளர்ச்சி பெறும். தவிர விரைவில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா நாடுகளுக்குடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் கையயழுத்திடும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். மேலும் அமெரிக்க அரசுடன் பேசி விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 40.3% ஆக உயர்வு: மத்திய அரசு

    August 25, 2025
    வணிகம்

    தொழில் முனைவோர்களுக்கான 3 நாள் ட்ரோன் பயிற்சி: செப்.9-ல் சென்னையில் தொடக்கம்

    August 25, 2025
    வணிகம்

    கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு: சில்லறை கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

    August 25, 2025
    வணிகம்

    ​​​​​​​அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்

    August 25, 2025
    வணிகம்

    ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம்

    August 25, 2025
    வணிகம்

    ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள், பாதுகாப்பற்ற செயலிகள் பயன்படுத்த தடை
    • வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவையில் ஆக.27, 28-ல் கனமழை வாய்ப்பு
    • கணேஷாவால் ஈர்க்கப்பட்ட 10 ஆண் குழந்தை பெயர்கள்
    • தேமுதிகவுக்கு 2026-ல் மிகப் பெரிய எழுச்சி: பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை
    • இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 40.3% ஆக உயர்வு: மத்திய அரசு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.