Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பத்மஸ்ரீ பாபா சிவானந்த் காலமானார்: பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி இரங்கல் 
    தேசியம்

    பத்மஸ்ரீ பாபா சிவானந்த் காலமானார்: பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி இரங்கல் 

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பத்மஸ்ரீ பாபா சிவானந்த் காலமானார்: பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி இரங்கல் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற ஆன்மிக குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், வாராணாசியிலுள்ள பனராஸ் இந்து பல்கலைகழகத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) இரவு அவர் காலமானார். மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல், வாராணாசியின் கபீர்நகர் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை நடைபெறும் என்று சீடர்கள் தெரிவித்தனர். சிவானந்துக்கு வயது 128 என அவரது சீடர்களால் கூறப்படுகிறது. பாபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்த பதிவில், “சிவானந்த் பாபாஜியின் மறைவு குறித்து கேள்விப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது வாழ்க்கை நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். யோகா மூலம் சமூகத்துக்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. சிவானந்த் பாபா சிவலோகத்துக்கு புறப்பட்டது காசிவாசிகளான நமக்கும், அவரிடமிருந்து உத்வேகம் பெறும் லட்சக்கணக்கான மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயர நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    யோகி ஆதித்யநாத் இரங்கல்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், யோகா குருவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், ‘யோகா துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்த காசியின் பிரபல யோகா குரு ‘பத்ம ஸ்ரீ’ சுவாமி சிவானந்த் ஜி காலமானார் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவருக்கு பணிவான அஞ்சலி! உங்கள் சாதனா மற்றும் யோகா நிறைந்த வாழ்க்கை முழு சமூகத்திற்கும் ஒரு சிறந்த உத்வேகமாகும். நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும் யோகாவின் விரிவாக்கத்திற்காக அர்ப்பணித்தீர்கள். உங்கள் மறைவால் ஏற்பட்ட துக்கத்தைத் தாங்கும் வலிமையை வழங்க பாபா விஸ்வநாத்திடம் நான் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    யார் இந்த சிவானந்த் பாபாஜி? அண்டைநாடான வங்கதேசத்தின் தற்போதைய சில்ஹெட் மாவட்டத்தில் ஆகஸ்ட் 8, 1896 அன்று பாபா சிவானந்த் பிறந்தார். தனது 6-வது வயதில் தன் பெற்றோரை பட்டினியால் இழந்ததாக அவர் கூறியுள்ளார். அப்போதிருந்தே அவர் ஒரு துறவிபோல் வாழத் தொடங்கியுள்ளார்.

    தனது பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, பாபா சிவானந்த், ஓம்கர்நந்த் என்பவரது பராமரிப்பில் இந்தியாவுக்கு அழைத்துச் வரப்பட்டார், பாபா சிவானந்திற்கு ஒரு பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் ஓம்கர்நந்த், ஆனார். அவரது வழிகாட்டுதலின் கீழ்தான் பாபா சிவானந்த் ஆன்மிகக் கல்வி மற்றும் வாழ்க்கை போதனைகளைப் பெற்றார்.

    அவர் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, யோகா பயிற்சி செய்து, தனது அனைத்து வேலைகளையும் தானே செய்வார். அவர் வேகவைத்த உணவை மட்டுமே சாப்பிட்டுவிட்டு, தரையில் ஒரு பாயில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவரது சீடர்கள் கூறினர்.

    பத்மஸ்ரீ விருது: யோகா மற்றும் ஆன்மிகத்துக்கு பாபா சிவானந்த் செய்த பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு, 2022-ல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். அவரது சீடர்கள் அவரது நீண்ட ஆயுளையும் வலுவான ஆரோக்கியத்தையும் அவரது ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டு எனக் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “ஒன்றிணைத்த பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி!” – ராஜ் தாக்கரேவுக்கு ஃபட்னாவிஸ் பதில்

    July 5, 2025
    தேசியம்

    பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை

    July 5, 2025
    தேசியம்

    ‘வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் மோடி அடிபணிவாரா?’ – ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதில்

    July 5, 2025
    தேசியம்

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மராத்தி’யால் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே: பின்னணி என்ன?

    July 5, 2025
    தேசியம்

    வர்த்தக ஒப்பந்தத்துக்கான ட்ரம்ப்பின் காலக்கெடுவுக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

    July 5, 2025
    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் செய்ய முறையான அனுமதி தேவை: அமைச்சர் சேகர்பாபு
    • வெறும் வயிற்றில் பழங்கள் இருக்கக்கூடாது என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர் 3 ஆபத்தான காரணங்களை அளிக்கிறார்: அதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்
    • “காவல் துறை அத்துமீறல் நீடித்தால் திமுக ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!” – திருப்புவனத்தில் ஓபிஎஸ் கருத்து
    • இந்திய கைவினைஞர் உரிமைகள் Vs பிராடா: கோலபுரி நகல் குறித்து மன்னிப்பு கோருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அதிமுகவை தோழமைக் கட்சியாக விஜய் பார்க்கிறாரா?” – திருமாவளவன் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.