Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»வடசென்னை மக்களின் வசதிக்காக பெரியார் நகர் அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்
    வணிகம்

    வடசென்னை மக்களின் வசதிக்காக பெரியார் நகர் அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வடசென்னை மக்களின் வசதிக்காக பெரியார் நகர் அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வடசென்னையில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் புதிதாக அஞ்சலக பாஸ்போர்ட் மையம் திறக்கப்பட உள்ளது.

    வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், வியாபாரம் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வெளி நாடு செல்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.

    சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இவை தவிர, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னை நகர அஞ்சல் மண்டலத்தின் கீழ், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் முதலில் ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து பின்னர் இங்கு சென்று நேர்காணலில் பங்கேற்க வேண்டும். சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற ரூ.1,500-ம், தட்கல் முறையில் பெற ரூ.3 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வட சென்னை பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் புதிதாக திறக்கப்பட உள்ளது.

    இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது: பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினமும் ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இவைதவிர, அஞ்சலகம் சார்பிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    சென்னை நகர மண்டலத்தின் கீழ், முதன்முதலாக கடந்த 2017ம் ஆண்டு வேலூர் தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. பின்னர், 2018-ம் ஆண்டு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையிலும், 2019ம் ஆண்டு ராணிப்பேட்டை மற்றும் ஆரணியிலும், 2019ம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரிலும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டன.

    இந்த சேவை மையங்கள் மூலம் இதுவரை 34.87 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில், அதாவது, 2024 ஏப்.1ம் தேதி முதல் இதுவரை 65,327 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சென்னையில் பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் புதிதாக பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. மத்திய அரசு இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த பாஸ்போர்ட் சேவை மையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், இந்த மையத்தில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

    வடசென்னை, மேற்கு சென்னை மற்றும் சென்னையை ஒட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப் பூண்டி, ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்த மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 40.3% ஆக உயர்வு: மத்திய அரசு

    August 25, 2025
    வணிகம்

    தொழில் முனைவோர்களுக்கான 3 நாள் ட்ரோன் பயிற்சி: செப்.9-ல் சென்னையில் தொடக்கம்

    August 25, 2025
    வணிகம்

    கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு: சில்லறை கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

    August 25, 2025
    வணிகம்

    ​​​​​​​அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்

    August 25, 2025
    வணிகம்

    ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம்

    August 25, 2025
    வணிகம்

    ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள், பாதுகாப்பற்ற செயலிகள் பயன்படுத்த தடை
    • வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவையில் ஆக.27, 28-ல் கனமழை வாய்ப்பு
    • கணேஷாவால் ஈர்க்கப்பட்ட 10 ஆண் குழந்தை பெயர்கள்
    • தேமுதிகவுக்கு 2026-ல் மிகப் பெரிய எழுச்சி: பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை
    • இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 40.3% ஆக உயர்வு: மத்திய அரசு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.