Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு இந்தியா தடை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!
    தேசியம்

    பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு இந்தியா தடை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!

    adminBy adminMay 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு இந்தியா தடை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, “மறுஉத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பொருட்கள் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உடனடியாக அமலாகும் வகையில் தடைவிதிக்க ஏதுவாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாக். கப்பல்களுக்கும் தடை: அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள மற்றொரு உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், “இந்திய சொத்துக்கள், சரக்கு மற்றும் உள்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில், வணிகக் கப்பல் சட்டம் 1958, பிரிவு 411-ன் கீழ் உடனடியாக அமலுக்கு வரும்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    தேசிய நலனுக்கு சேவையாற்ற மிகவும் பொருத்தமான முறையில், இந்திய வணிகக் கடற்படையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும், அதன் திறமையான பராமரிப்பினை உறுதி செய்யவதையும் இச்சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வர்த்தகம் நிறுத்தம்: பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையிலான நடவடிக்கையின் முதல் இலக்காக வர்த்தகம் மாறியுள்ளது. ஏற்கெனவே அட்டாரி – வாகா எல்லை வழியான அனைத்து வர்த்தகத்துக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு மிகவும் ஆதரவான நாடு என்ற நிலையை இந்தியா திரும்பப் பெற்றதில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நேரடி வர்த்தகம் வெகுவாக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி வெகுவாக குறைந்திருந்தாலும், துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பு துறைமுகங்கள் வழியாக சில பொருட்கள் இந்தியாவுக்கு வந்தன. கடந்த 2023- 24 ஆண்டில், இந்தியா பாகிஸ்தானில் இருந்து 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை, குறிப்பாக விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

    இதனிடையே, பாகிஸ்தான் அதன் மருத்துவப் பொருட்களுக்கான தேவைக்கு இந்தியாவையே சார்ந்திருந்தது. இந்தியா தற்போது அனைத்து வகையான வர்த்தகத்தையும் தடை செய்திருப்பதால், பாகிஸ்தான் அதன் மருத்துவப் பொருட்களுக்கான தேவைக்கு வேறு வழியை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

    June 30, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழை: 3 பேர் உயிரிழப்பு; 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    June 30, 2025
    தேசியம்

    ‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா

    June 30, 2025
    தேசியம்

    ‘போர் விமானத்தை இழந்தோம்’ – கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!

    June 30, 2025
    தேசியம்

    முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்

    June 30, 2025
    தேசியம்

    ஒடிசாவின் புரி ரதயாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள்  உயிரிழப்பு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்
    • லூயிஸ் உய்ட்டன் குரூஸ் வடிவ கடை: லூயிஸ் உய்ட்டன் அதன் ஒரே பயண வடிவ கடையைத் திறந்தது, அதன் இருப்பிடம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!
    • அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
    • தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு
    • எடை குறைக்க வேண்டுமா? நீங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.