Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் உற்சவம்!
    ஆன்மீகம்

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் உற்சவம்!

    adminBy adminMay 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் உற்சவம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    செங்கல்பட்டு வமாட்டம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடல் பெற்றது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் 3-ம் நாளான இன்று காலை மே 3-ம் தேதி அதிகார நந்தி மற்றும் 63 நாயன்மார்களின் உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி, அம்பாளுடன் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதையடுத்து, 63 நாயன்மார்களும் சுவாமியை வணங்கியபடி ஊர்வலமாக செல்ல, முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி வீதியுலா நடைபெற்றது. மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் சுவாமி உலா செல்ல, பக்தர்கள் சுவாமியை வணங்கியபடி கிரிவலம் வந்தனர். பக்தர்கள், ‘ஓம் நமச்சிவாய’ என்ற வேத மந்திரங்கள் முழங்க கிரிவலம் வந்தனர்.

    அவரை தொடர்ந்து திரிபுரசுந்தரி அம்மன், முருகன், வள்ளி, தெய்வணை, சண்டிகேஸ்வரார் ஆகியோர் எழுந்தருளி வடக்கு கோபுர வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில், திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புறங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வழி நெடுகிலும் பஞ்சமூர்த்திகளுக்கு தேங்காய் உடைத்தும் கற்பூர ஆரத்தி காட்டியும் சாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. மே 7-ம் தேதி, சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத உற்சவம் நடைபெற உள்ளது. இந்த 63 நாயன்மார்கள் வீதி உலாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் ச. புவியரசு மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

    July 3, 2025
    ஆன்மீகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    July 3, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானைக்கு மணிமண்டபம்!

    July 2, 2025
    ஆன்மீகம்

    ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

    July 1, 2025
    ஆன்மீகம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

    June 30, 2025
    ஆன்மீகம்

    பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாளுக்குப் பதில் வேல்… திமுகவினரையும் திருப்பிவிட்ட பாஜக! – முருகனை தூக்கிப் பிடிக்கும் தமிழக அரசியல் களம்!
    • கொழுப்பு கல்லீரல் நீரிழிவு நோயை எவ்வாறு மோசமாக்குகிறது – மற்றும் நேர்மாறாக – இந்தியாவின் நேரங்கள்
    • பூமியின் வேகமான சுழல் குறுகிய நாட்களை ஏற்படுத்தக்கூடும், விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர் – நீங்கள் கவலைப்பட வேண்டுமா | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கொல்கத்தா பாலியல் வழக்கில் பிர​மாண பத்​திரம் தாக்கல் செய்ய உத்தரவு
    • திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.