Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வரவேண்டும்! – கார்த்தி சிதம்பரத்தின் கனவு பலிக்குமா?
    மாநிலம்

    தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வரவேண்டும்! – கார்த்தி சிதம்பரத்தின் கனவு பலிக்குமா?

    adminBy adminMay 3, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வரவேண்டும்! – கார்த்தி சிதம்பரத்தின் கனவு பலிக்குமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழகத்தில் 1972-க்கு முன்பு வரைக்கும் காங்கிரஸுக்கும் திமுக-வுக்கும் இடையே தான் போட்டி என்ற நிலை இருந்தது. 1972-ல் எம்ஜிஆர், அதிமுக-வை தொடங்கிய பிறகு களம் திமுக-வுக்கும் அதிமுக-வுக்குமான போட்டியாக மாறிப்போனது. அதன் பிறகு கடந்த 53 வருடங்களாக காங்கிரஸால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை.

    அ​தி​முக-​வும் திமுக-​வும் தங்​கள் தலை​மை​யிலேயே கூட்​ட​ணி​களை கட்​டமைத்து வரு​கின்​றன. காங்​கிரஸ் அதில் பத்​தோடு பதினொன்​றாகத்​தான் ஒட்​டிக் கொள்​கிறது. இன்​றைக்கு வந்த அண்​ணா​மலை, நயினார், சீமான், நடிகர் விஜய் போன்​றவர்​களைக் கூட முதல்​வர் வேட்​பாளர் என தெம்​பாகச் சொல்​கின்றன அவர்​கள் சார்ந்​திருக்​கும் கட்​சிகள். ஆனால், ஒரு காலத்​தில் தமி​ழ​கத்தை ஆளும் கட்​சி​யாக இருந்த காங்​கிரஸுக்​கு, ‘இவர் தான் எங்​களின் முதல்​வர் வேட்​பாளர்’ என்று சொல்ல இப்​போது தன்​னம்​பிக்கை இல்​லாமல் போய்​விட்​டது.

    ஊடகம் ஒன்​றுக்கு அளித்த பேட்டி ஒன்​றில் இந்​தக் கருத்தை தயக்​கமின்றி பேசி இருக்​கும் காங்​கிரஸ் எம்​பி-​யான கார்த்தி சிதம்​பரம், “தமிழக காங்​கிரஸுக்கு எதிர்​காலம் என்​பது பெரும் சவாலானது. தமிழக அரசி​யலில் கட்​சிகள் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இரு திரா​விட கட்​சிகளும் பலமாக உள்​ளது. திமுக, தொண்​டர்​கள் ரீதி​யாக அடிப்​படை கட்​டமைப்பை பலமாக வைத்​துள்​ளது.

    அடுத்​தடுத்த தலை​முறைக்​கான இளம் தலை​வர்​களை அக்​கட்சி அறி​முகம் செய்து வரு​கிறது. அதை சீனியர்​களும் ஏற்​றுக் கொள்​கி​றார்​கள். இன்​னும் 25 ஆண்​டு​களுக்கு தேர்​தல் ரீதியி​லான பிரச்​சினை​களை எதிர்க்​கொண்டு திமுக நீடித்து நிற்​கும். அதே​போல் அதி​முக-வை​யும் குறைத்து மதிப்​பிட முடி​யாது. இந்​தக் கட்​சிக்​கும் கிராம அளவில் வலு​வான கட்​டமைப்பு இருக்​கிறது. அதனாலேயே அந்​தக் கட்​சி​யுடன் சேர்ந்து தமி​ழ​கத்​தில் காலூன்ற நினைக்​கிறது பாஜக.

    இரு திரா​விட கட்​சிகளும் வேண்​டாம் என்ற தாக்​கம் இருந்​தா​லும் மக்​கள் எப்​போது முடி​வெடுக்​கப் போகி​றார்​களோ அப்​போது​தான் அது நிறை​வேறும். அண்​ணா​மலை வரு​கைக்கு பின் தமி​ழ​கத்​தில் பாஜக சற்று வளர்ந்​திருப்​ப​தாகவே பார்க்​கப்​படு​கிறது. ஆனால், மக்​களவை தேர்​தல் வரும்​போது, மட்​டுமே பேசும் கட்​சி​யாக காங்​கிரஸ் உள்​ளது. திமுக, அதி​முக, தவெக போன்ற கட்​சிகளில் ஒரு​வரை முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தும் போது காங்​கிரஸில் மட்​டும் அப்​படியொரு நிலை இல்​லையே என, மக்​கள் யோசிக்​கின்​ற​னர்.

    கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும் மக்​கள் பிரச்​சினை​களைப் பற்றி பேசவேண்​டும். காங்​கிரஸ் அப்​படிப் பேசுவ​தில்லை என்ற குற்​றச்​சாட்டு உள்​ளது. தேசிய கட்​சி​யாக தனிப்​பட்ட கருத்​துகளை வெளிப்​படுத்​தவேண்​டும். நடை, உடை, பாவனையை மாற்றி தமி​ழ​கத்​தில் அரசி​யல் கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்​சி​யாக காங்​கிரஸ் வளர​வேண்​டும்; வரவேண்​டும்” என்று மனதில் பட்​டதைப் பளிச்​சென சொல்லி இருக்​கி​றார்.

    கார்த்​தி​யின் இந்​தக் கருத்​தானது காங்​கிரஸ் கட்​சிக்​குள்​ளேயே ஆதர​வை​யும் எதிர்ப்​பை​யும் கிளப்பி வரும் நிலை​யில், இதுகுறித்து நம்​மிடம் பேசிய காங்​கிரஸ் பொதுக்​குழு உறுப்​பினர் சிவகங்கை பழனியப்​பன், “தமி​ழ​கத்​தில் பாஜக வளர்ந்​திருந்​தா​லும் சிவகங்கை தொகு​தி​யில் தொடர்ந்து காங்​கிரஸ் தான் வெற்றி பெறுகிறது. கன்​னி​யாகுமரியை விட, சிவகங்கை மாவட்​டத்​தில் காங்​கிரஸ் வலு​வாக இருந்​தா​லும் இடை​யில் கொஞ்​சம் தொய்வு ஏற்​பட்​டது. அதற்​காக தொண்​டர்​களை உற்​சாகப்​படுத்த கார்த்தி சிதம்​பரம் அப்​படிப் பேசி​யிருக்​கலாம். தமிழக காங்​கிரஸ் தலை​வர் பதவியை எதிர்​பார்த்​திருக்​கும் கார்த்​தி, அதற்​காக​வும் அப்​படிப் பேசி இருக்​கலாம்.

    கட்​சி​யிலுள்ள இளைஞர்​களை உற்​சாகப்​படுத்​தும் நோக்​கில் பாஜக வளர்ந்​திருக்​கிறது; நாமும் வளர​வேண்​டும் என, கார்த்தி சிதம்​பரம் பேசி இருப்​ப​தாகவே நான் பார்க்​கிறேன். ஆனால், காங்​கிரஸ் கட்​சி​யின் வளர்ச்​சிக்கு உற்​சாகம் மிகுந்த மாநில தலைமை வேண்​டும். சிறு பிரச்​சினை​யாக இருந்​தா​லும் தொண்​டர்​கள் போன் செய்​தால் தலை​வர், நிர்​வாகி​கள் எடுத்​துப் பேசி என்ன ஏதென்று கேட்க வேண்​டும்.

    ஆனால், காங்​கிரஸ் நிர்​வாகி​களில் பலரும் இரவு 9 மணிக்கு மேல் செல்​போனை அணைத்து வைத்​து​விடு​கி​றார்​கள். இப்​படி இருந்​தால் தொண்​டர்​களுக்கு எப்​படி உற்​சாகம் வரும்? அதே​போல், பொதுப்​பிரச்​சினை​களுக்​காக பொது​மக்​கள் அழைத்​தால் உடனே நாம் அங்கு செல்​ல​வேண்​டும். அதி​காரி​களிடம் முறை​யிட வேண்​டும். மற்ற கட்​சி​யினர் செய்​வதை நாமும் செய்​ய​வேண்​டும் என மக்​கள் எதிர்​பார்க்​கி​றார்​கள். இதையெல்​லாம் மனதில் வைத்தே கார்த்தி சிதம்​பரம் அப்​படிப் பேசி இருப்​பார்” என்​றார்.

    கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்​சி​யாக தமி​ழ​கத்​தில் காங்​கிரஸ் தன்னை வளர்த்​துக் கொள்ள வேண்​டும் என நினைக்​கி​றார் கார்த்தி சிதம்​பரம். ஆனால், மாநில தலை​வரை மாற்ற வேண்​டும் என டெல்​லிக்கு மனு போட்​டுக் கொண்​டிருக்​கி​றார்​கள் இங்​குள்ள காங்​கிரஸ் மாவட்ட தலைவர்​கள்​!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

    June 30, 2025
    மாநிலம்

    திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

    June 30, 2025
    மாநிலம்

    அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

    June 30, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி

    June 30, 2025
    மாநிலம்

    விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

    June 30, 2025
    மாநிலம்

    விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘இந்திய அணிக்கு ஃபீல்டிங் சரியில்லாதது பெரிய பிரச்சினை அல்ல’ – புதிர் போடும் கிரெக் சாப்பல்
    • தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!
    • எங்கள் எழுதப்படாத சியோல் முடிவு விளக்கியது: மி ரே மற்றும் மி ஜி அவர்களின் புதிய பயணங்களை எவ்வாறு தொடங்கினார்கள் – மற்றும் சீசன் 2 இருக்குமா?
    • மூவரின் திட்டமிட்ட ‘கொடூரம்’ – கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்தில் காவல் துறை புதிய தகவல்
    • திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.