Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்புகள் ஒன்றும் ரகசியமில்லை’ – பிலாவல் பூட்டோ பகிரங்க ஒப்புதல்
    உலகம்

    ‘பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்புகள் ஒன்றும் ரகசியமில்லை’ – பிலாவல் பூட்டோ பகிரங்க ஒப்புதல்

    adminBy adminMay 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்புகள் ஒன்றும் ரகசியமில்லை’ – பிலாவல் பூட்டோ பகிரங்க ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக்கொண்டுள்ள அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பதை ரகசியம் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸின் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் கடந்த வாரம் உரையாடல் நிகழ்த்திய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்து பாகிஸ்தான் தவறிழைத்ததாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அதே ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ மேற்கொண்ட உரையாடலில், குவாஜா எம் ஆசிப் கூறியதை வழிமொழிந்தார். “பாதுகாப்பு அமைச்சர் கூறியதைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பது ஒரு ரகசியம் என்று நான் நினைக்கவில்லை. இதன் விளைவாக, நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.

    தீவிரவாதத்தின் பல அலைகளை நாங்கள் கடந்து வந்துள்ளோம். நாங்கள் அனுபவித்தவற்றின் விளைவாக, எங்களுக்கான பாடங்களையும் கற்றுக்கொண்டோம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உள் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். பாகிஸ்தானின் வரலாற்றைப் பொறுத்தவரை, அது வரலாறு, இன்று நாம் அதில் பங்கேற்கவில்லை. அது நமது வரலாற்றின் ஒரு துரதிர்ஷ்டவசமான பகுதி என்பது உண்மைதான்.” என்று பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

    குவாஜா எம் ஆசிப் ஒப்புதல்: ஸ்கை நியூஸ் விவாதத்தின்போது, “பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று நெறியாளர் யால்டா ஹக்கீம், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா எம் ஆசிப்பிடம் கேட்டார். அதற்கு குவாஜா எம் ஆசிப், “கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்காக நாங்கள் இதைச் செய்தோம். அமெரிக்காவுக்காக மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகள் மற்றும் இங்கிலாந்துக்காகவும் நாங்கள் இந்த மோசமான வேலையை செய்து வருகிறோம். அது ஒரு தவறு. பாகிஸ்தான் அதனால் பாதிக்கப்பட்டது.

    சோவியத் – ஆப்கானிஸ்தான் போரின் போதும், 9/11-க்குப் பிறகு தலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரின்போதும் மேற்கு நாடுகளுடன் இஸ்லாமாபாத் (பாக். அரசு) இணைந்திருக்காவிட்டால் பாகிஸ்தானின் கடந்த காலப் பதிவு ‘குற்றச்சாட்டுக்கு இடமில்லாதது’ ஆக இருந்திருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.

    ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் முஸ்லிம் அல்லாத 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஒப்புதல் பேச்சுக்கள் வெளியாகி இருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘கனவுகளுடன் அமெரிக்காவிற்கு வந்தார்’: ப்ரீத் ஹர்சோடாவின் நண்பர்கள் சிகிச்சைக்காக உதவியை நாடுகின்றனர், 30 இந்திய மாணவர்கள் FSU தீயில் பாதிக்கப்பட்டுள்ளனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்

    December 1, 2025
    உலகம்

    ‘இந்தியாவில் ஒரு மாவட்டத்திற்கு 220,000 H-1B விசாக்கள் கிடைத்துள்ளன’: அமெரிக்க பொருளாதார நிபுணர் ‘மோசடி’யை விளக்குகிறார், சீனாவில் இருந்து 12% மட்டுமே வருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்

    December 1, 2025
    உலகம்

    தேசி மாகா ஆதரவாளர்: நளின் ஹேலி யார்? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க தூதரின் மகன் விவேக் ராமசாமி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமந்தா ரூத் பிரபுவின் மயோசிடிஸ் பயணம்: ஆட்டோ இம்யூன் நிலை மற்றும் நடிகர் வலியை உண்மையான வலிமையாக மாற்றியது பற்றி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கனவுகளுடன் அமெரிக்காவிற்கு வந்தார்’: ப்ரீத் ஹர்சோடாவின் நண்பர்கள் சிகிச்சைக்காக உதவியை நாடுகின்றனர், 30 இந்திய மாணவர்கள் FSU தீயில் பாதிக்கப்பட்டுள்ளனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ – மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்
    • புதிய பாடத்திட்ட வடிவமைப்பு வல்லுநர் குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
    • அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.