Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கருக்கலைப்பின்போது மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு
    மாநிலம்

    கருக்கலைப்பின்போது மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு

    adminBy adminMay 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கருக்கலைப்பின்போது மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பட்டியலின மாணவி கருக்கலைப்பின்போது உயிரிழந்த விவகாரம் குறித்து செங்கல்பட்டு எஸ்பி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, அந்த மாணவிக்கு படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த நிலையில் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநிலக் குழு தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    முதல் தகவல் அறிக்கை: அந்த புகாரில், ‘பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவியை உதவிப் பேராசிரியர் ராஜேஷ்குமார் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கருக்கலைப்பு காரணமாக அந்த மாணவி உயிரிழந்த நிலையில் ராஜேஷ்குமார் மீது பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை’ என கூறியிருந்தனர். இந்த புகாரை ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர் ஆனந்தராஜா ஆகியோர் விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு எஸ்பி உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்

    July 1, 2025
    மாநிலம்

    ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

    July 1, 2025
    மாநிலம்

    காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணி: அரசு அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!

    July 1, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பீட்ரூட் சாறு முதல் எலுமிச்சை நீர் வரை: சிறந்த ஹார்வர்ட் டாக்டர் கல்லீரல் ஆரோக்கியத்திற்காக 9 சிறந்த மற்றும் மோசமான பானங்கள்
    • பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?
    • தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்
    • இதய ஆரோக்கியம்: அமெரிக்காவை தளமாகக் கொண்ட மருத்துவர் 5 நிமிட தினசரி பழக்கவழக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மற்றும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்
    • ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.