Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ரயில்வே காவல்துறையின் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு: தமிழகம் முழுவதும் உறுப்பினர்களாக இணைந்த 3,000 பெண்கள்
    மாநிலம்

    ரயில்வே காவல்துறையின் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு: தமிழகம் முழுவதும் உறுப்பினர்களாக இணைந்த 3,000 பெண்கள்

    adminBy adminMay 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரயில்வே காவல்துறையின் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு: தமிழகம் முழுவதும் உறுப்பினர்களாக இணைந்த 3,000 பெண்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட பெண் பயணிகள் பாதுகாப்பு குழுவில் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் சுமார் 3,000 பெண் பயணிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோவை ஆகிய நிலையங்களில் இருந்து தலா 100 பெண் பயணிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர்.

    கோவை – திருப்பதிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் மகளிர் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட சம்பவம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் மற்றும் தங்க செயின் பறித்த சம்பவம் ஆகியவை தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களை அடுத்து, பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே போலீஸார், ஆர்.பி.எஃப் போலீஸாருடன் இணைந்து தீவிரமாக கணிகாணிப்பில் ஈடுபடுவது, பாதுகாப்பை அதிகரிப்பது உள்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    இதன் ஒருபகுதியாக, ரயில்களில் வழக்கமாக பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு பாதுகாப்பு குழுவை அமைக்கவும், இதில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே அதிகாரிகள், மாதாந்திர டிக்கெட் எடுத்து பயணிக்கும் பெண்கள், வழக்கமாக ரயிலில் பயணிக்கும் இதர பெண் பயணிகள் என பலரை உறுப்பினராக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பெண் பயணிகளின் பாதுகாப்பு குழு சென்னையில் மார்ச் 27-ம் தேதி தொடங்கப்பட்டது.

    தற்போது, இக்குழு தொடங்கி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பெண் பயணிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். சிறிய ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் 50 பெண் பயணிகள், பெரிய ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் 100 பெண் பயணிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகிறார்கள்.

    இதுகுறித்து, தமிழக ரயில்வே காவல் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தில் 23 காவல் நிலையங்களும், திருச்சி ரயில்வே காவல் மாவட்டத்தில் 24 காவல் நிலையங்களும் என மொத்தம் 47 நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்கள் வாயிலாக, குழுவில் பெண் பயணிகள் இணைக்கப்படுகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். சென்னை மாவட்ட ரயில்வே காவல் பிரிவில் 10 பெரிய ரயில் நிலையங்களில் தலா 100 பெண் பயணிகளும், 13 சிறிய நிலையங்களில் தலா 50 பெண் பயணிகளும் சேர்ந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட நிலையங்களில் தலா 100 பெண் பயணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில் பயணத்தின்போது, ஏதாவது குற்றச்சம்பவம் தொடர்பாக இக்குழுவில் உள்ள உறுப்பினர் தகவல் கொடுத்தால், மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு குழுவில் அட்மினாக காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இருப்பார்கள்.

    ரயில் பயணத்தின்போது, சிறிய குற்றங்கள் தொடர்பாக தகவல் வருகின்றன. அந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருப்பது ஏன்? – டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலாளர்கள் நோட்டீஸ்

    June 30, 2025
    மாநிலம்

    கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

    June 30, 2025
    மாநிலம்

    அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து

    June 30, 2025
    மாநிலம்

    அன்புமணி திடீர் டெல்லி பயணம்

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

    June 30, 2025
    மாநிலம்

    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 60-30-10 பாணி சூத்திரம்: ஒவ்வொரு அலங்காரத்தையும் வடிவமைப்பாளர்-நிலை-இந்தியாவின் நேரங்களை உருவாக்கும் ஒரு எளிய விதி
    • பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
    • டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருப்பது ஏன்? – டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலாளர்கள் நோட்டீஸ்
    • கொழுப்பு கல்லீரல்: கொழுப்பு கல்லீரலை மாற்றியமைக்க சிறந்த உடற்பயிற்சியை அமெரிக்க மருத்துவர் வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.