Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»”ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றத் தேவையில்லை”: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை
    மாநிலம்

    ”ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றத் தேவையில்லை”: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை

    adminBy adminMay 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ”ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றத் தேவையில்லை”: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என தமிழக டிஜிபி சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி தேஷ்முக் ஷேகர் சஞ்சய் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து, விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அதில் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 13 சாட்சிகளிடம் மகளிர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு தவிர, கடந்த 2010 முதல் கடந்த 2024 வரை ஞானசேகர் மீது சென்னை, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்தது, பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது, அண்ணா பல்கலைக்கழகத்தின் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டு மிரட்டி மொபைல் போன்களை பறித்தது, சாஸ்திரி நகர் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்து வழிப்பறியில் ஈடுபட்டது என மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஆக மொத்தம் அவர் மீது பதியப்பட்ட 36 வழக்குகளில் 5 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தண்டனை விதித்துள்ளது. 9 வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு எதிரான எந்த வழக்கிலும் விசாரணை நிலுவையில் இல்லை என்பதால் அவர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜூன் 12ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்

    June 30, 2025
    மாநிலம்

    பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலை: ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.2.51 கோடி வரை நிர்ணயம்

    June 30, 2025
    மாநிலம்

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும்: அன்புமணி

    June 30, 2025
    மாநிலம்

    கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

    June 30, 2025
    மாநிலம்

    ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

    June 30, 2025
    மாநிலம்

    பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்
    • மறைந்த இளவரசி டயானா ஒருபோதும் கையுறைகளை அணியவில்லை என்பதற்கான தொடுகின்ற காரணம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலை: ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.2.51 கோடி வரை நிர்ணயம்
    • இந்த பருவமழை தாய் மங்கூர் மீன் சாப்பிட வேண்டாம்: இது தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சதம் விளாசி டூப்ளசி சாதனை: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் @ MLC 2025

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.