Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்
    மாநிலம்

    தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்

    adminBy adminMay 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தருமபுரி: தருமபுரியில் நடந்த தேமுதிக மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையில் நேற்று தேமுதிக-வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்கள் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்ட செயலாளர்கள் குமார், விஜயசங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக சுதீஷ் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை பொதுச் செயலாளர் பிரேமலதா மேடையில் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

    தொடர்ந்து நடந்த கூட்டத்தில், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு தேமுதிக வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நாட்டின் எல்லைப்பகுதிகளை மத்திய அரசு பலப்படுத்திட வேண்டும். தேமுதிக-வின் நிறுவனத் தலைவரான மறைந்த விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    விஜயகாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து, சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும். வக்பு திருத்தச் சட்டம் மூலம் இசுலாமியர்களின் சொத்துக்களுக்கு பாதிப்பு, தீங்கு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். சாதி வெறி தூண்டுதலால் மாணவர் சமுதாயத்தில் நிலவும் பழி வாங்கும் உணர்வு, போதைக்கு அடிமையாகும் நிலை போன்ற சூழல்களால் மாணவர்கள் வாழ்வை இழக்கின்றனர்.

    இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு எதிர்வரும் கல்வியாண்டு முதல் ‘நல் ஒழுக்கம்’ என்ற பாடப் பிரிவை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். தமிழகத்தில் அதிகரித்துள்ள கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தமிழக அரசு கடும் நடவடிக்கை மூலம் தடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதுடன், கச்சத் தீவையும் மீட்டெடுக்க வேண்டும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள், விசைத் தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் மின்சாரம், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜிஎஸ்டி-யை குறைப்பதுடன், நெசவாளர்களின் கூலியை அதிகரித்திட வேண்டும். பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தும், உயிரிழப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக ஆட்சி கால காவல்நிலைய மரணங்களுக்கு மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? – தவெக

    June 29, 2025
    மாநிலம்

    ‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு

    June 29, 2025
    மாநிலம்

    திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    June 29, 2025
    மாநிலம்

    திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

    June 29, 2025
    மாநிலம்

    கலாநிதி – தயாநிதி விவகாரம்: சன் குடும்ப மோதல்… கலைஞர் இல்லாத குறையை தீர்ப்பாரா ஸ்டாலின்?

    June 29, 2025
    மாநிலம்

    செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 7 விளையாட்டு மாற்றும் ரகசியங்கள் செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்காக ஆழ் மனதை மாற்றியமைக்க
    • பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
    • ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்துக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன் – ஆமிர்கான்
    • திமுக ஆட்சி கால காவல்நிலைய மரணங்களுக்கு மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? – தவெக
    • மகிழ்ச்சியான திருமணத்திற்கு 5 பழக்கம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.