Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முழு ஆதரவு: இங்கிலாந்து அரசு அறிவிப்பு
    உலகம்

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முழு ஆதரவு: இங்கிலாந்து அரசு அறிவிப்பு

    adminBy adminMay 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முழு ஆதரவு: இங்கிலாந்து அரசு அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லண்டன்: பஹல்காம் தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என்றும், அதே நேரத்தில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவும் இங்கிலாந்து உதவும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹமீஸ் ஃபல்கனர் பேசியதாவது:

    பஹல்காம் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு, இங்கிலாந்தின் முழு ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க உதவவும் இங்கிலாந்து முக்கிய பங்காற்றும். இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் இங்கிலாந்து தெருக்களில் எதிரொலிக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

    இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கவலையளிக்கிறது. தாக்குதல் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த அங்கீத் லவ்(41) மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கடந்த திங்கட் கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    இந்தியாவில் மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி பாகிஸ்தானை இங்கிலாந்து கேட்டுக்கொள்கிறது. இரு நாடுகளும் பாதுகாப்பாக இருக்க இங்கிலாந்து தனது ஆதரவை அளிக்கும். இவ்வாறு ஹமீஸ் ஃபல்கனர் கூறினார்.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதற்கு பல எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதையும், பாகிஸ்தானுக்கு எதிராக நிருபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் கூறுவதையும், புல்டோசர் மூலம் தீவிரவாதிகளின் வீடுகளை இடித்ததையும் சில எம்.பி.க்கள் விமர்சித்தனர்.

    லேபர் கட்சி எம்.பி. பேரி கார்டினர் பேசுகையில், ‘‘தீவிரவாத பயிற்சி முகாம்களை மூடினால்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க முடியும் என நாம் நிபந்தனை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ட்ரம்பின் ஈரான் குண்டுவெடிப்புகளுக்கு நெட்டிசன்கள் பதிலளிக்கின்றன; ஈரான் வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தில் சேர பரோன் டிரம்ப் அழைக்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    உலகம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்டுகிறது பாகிஸ்தான்

    June 29, 2025
    உலகம்

    ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு

    June 29, 2025
    உலகம்

    தலிபான் தாக்குதலில் பாகிஸ்தானில் 16 வீரர்கள் உயிரிழப்பு

    June 29, 2025
    உலகம்

    பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி

    June 28, 2025
    உலகம்

    காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ட்ரம்பின் ஈரான் குண்டுவெடிப்புகளுக்கு நெட்டிசன்கள் பதிலளிக்கின்றன; ஈரான் வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தில் சேர பரோன் டிரம்ப் அழைக்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபகர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை
    • அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்
    • அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: அதிமுக ஐ.டி. அணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
    • இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.