Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
    உலகம்

    36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

    adminBy adminMay 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பகமான உளவுத்துறை தகவல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

    அவ்வாறு, இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், இந்தியா விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

    இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

    இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சில மணி நேரத்தில் பாகிஸ்தான் தரப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறியதாவது: ஆதாரமற்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

    பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் எப்போதும் கண்டித்து வருகிறோம்.

    இந்த விவகாரத்தில் வெளிப்படையான, நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், இதனை தவிர்த்து மோதல் பாதையை இந்தியா தேர்ந்தெடுக்கிறது. அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை எங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் எவ்வித ராணுவ தாக்குதலுக்கும் உறுதியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும். அனைத்து விளைவுகளும் இந்தியாவையே சாரும். இவ்வாறு பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

    சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் கொடும்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டிஆர்எப் என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    உக்ரைன் போர் நிறுத்தம் இல்லை: ட்ரம்ப் – புதின் சந்திப்பும், தொடரும் பின்னடைவும்!

    August 16, 2025
    உலகம்

    உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

    August 15, 2025
    உலகம்

    அவர் ஒருபோதும் நிகழ்த்தாத அறுவை சிகிச்சைகள்: மருத்துவ மோசடி குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கு இந்தியன் -ஆரிஜின் ஹூஸ்டன் மருத்துவர் million 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த ஒப்புக்கொள்கிறார் – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 14, 2025
    உலகம்

    இந்தியா தினம் ஒத்திவைக்கப்படுவதால் இந்திய மாணவர் டப்ளினில் தாக்கப்படுவார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 14, 2025
    உலகம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? – பாகிஸ்தானிடம் கேட்க அமெரிக்கா பதில்

    August 14, 2025
    உலகம்

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா – பாகிஸ்தான் இணைந்து தீவிரமாக செயல்பட முடிவு

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு: ஜி.கே. வாசன் இரங்கல்
    • தைராய்டு, இதயம் மற்றும் ஊட்டச்சத்து சிக்கல்களின் சாம்பல் முடி எச்சரிக்கை: உங்கள் தலைமுடியில் குறைபாடுகள் மற்றும் உறுப்பு அழுத்தங்கள் எவ்வாறு காட்டுகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஓபிஎஸ் வலியுறுத்தல்
    • நீரிழிவு ஆபத்து குடும்பங்களில் இயங்குகிறது: ஒரு நபரின் ப்ரீடியாபயாட்டீஸ் முழு குடும்பத்திற்கும் ஆபத்தை எவ்வாறு குறிக்கலாம்
    • கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவோம்: பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.