சென்னை: அட்சய திருதியை தினமான இன்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையாகிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று இரவு 8.40 மணிக்குத் தொடங்கி, இன்று (30-ம்) மாலை 6.45 மணிவரை நீடிக்கிறது. இதையடுத்து, நகை வியாபாரிகள் இன்று காலையிலேயே அட்சய திருதியை சிறப்பு விற்பனையைத் தொடங்கினர்.
நகைக் கடைகளில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு காலை 6 மணிக்கே நகைக் கடைகள் திறக்கப்பட்டது. நகைகளுக்கு லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அட்சய திருதியை தினமான இன்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கு விற்பனையாகிறது. இது நகை வாங்குவோருக்கு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.