Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் 6-வது நாளாக மீறல் – இந்திய ராணுவம் பதிலடி!
    தேசியம்

    காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் 6-வது நாளாக மீறல் – இந்திய ராணுவம் பதிலடி!

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் 6-வது நாளாக மீறல் – இந்திய ராணுவம் பதிலடி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவ தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    ஜம்மு – காஷ்மீரின் உரி, நவு​கம், ராம்​பூர், கெரன், குப்​வா​ரா, பூஞ்ச் உள்​ளிட்ட எல்​லைப் பகு​தி​களில் கடந்த 6 நாட்​களாக இந்​திய, பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு இடையே கடும் துப்​பாக்​கிச் சண்டை நடை​பெற்று வரு​கிறது.

    ‘பாகிஸ்தான் ராணுவ நிலைகளில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை துப்பாக்கிச் சூடு நீடித்தது. ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது’ என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்​திய, பாகிஸ்​தான் எல்​லை​யில் தொடர்ந்து அசா​தாரண சூழ்​நிலை நில​வு​கிறது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக எல்​லைப் பகுதி மக்​கள் பதுங்கு குழிகளை அமைத்​துள்​ளனர். பல்​வேறு கிராமங்​களில் ராணுவத்​தின் உதவி​யுடன் மிகப் ​பெரிய ரகசிய பதுங்கு அறை​கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதுங்கு அறை​களில் சமையலறை, கழிப்​பறை, படுக்கை வசதி, பிரிட்ஜ் உள்​ளிட்ட அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன. ஒரு மாதத்​துக்​கு தேவை​யான மளி​கைப் பொருட்​களும் சேகரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன.

    போர்ப் பதற்றம் அதிகரிப்பு: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் அந்​நாட்டு உளவுத் துறை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் இரு நாடு​களிடையே போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

    இந்தச் சூழலில், மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான், ராணுவ தளபதி உபேந்​திர திவிவே​தி, கடற்​படை தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்​லி​யில் நேற்று பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​தனர். பிரதமரின் இல்​லத்​தில் சுமார் 90 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

    அப்​போது, பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக​வும், அதற்கு தக்க பதிலடி கொடுப்​பது குறித்​தும் விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி பேசும்​போது, “தீ​விர​வாதத்தை வேரறுக்க வேண்​டும். பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்​டும்.

    எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது, எந்த இடங்​களில் தாக்​குதல் நடத்த வேண்​டும், எப்​போது தாக்​குதல் நடத்த வேண்​டும் என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம். இந்த விவ​காரத்​தில் முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம்” என்று தெரிவித்தார்​.

    ஜம்மு காஷ்மீர் பகு​தி​யில் இந்​திய ராணுவ​மும், மத்​திய ஆயுத போலீஸ் படை​யும் நேற்று போர் பயிற்​சி​யில் ஈடு​பட்​டன. இது தொடர்​பான புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. மேலும், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்​லைப் பகு​தியை சேர்ந்த கிராம மக்​களுக்கு ராணுவம் சார்​பில் நேற்று சிறப்பு பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன.

    காஷ்மீரின் ஜம்மு பகு​தி​யில் தேசிய பாது​காப்பு படை (என்​எஸ்​ஜி) கமாண்​டோக்​கள், மாநில போலீ​ஸார் இணைந்து பாது​காப்பு ஒத்​தி​கையை நடத்​தினர். ஜம்மு பகு​தி​யில் உள்ள இந்து கோயில்​களில் இந்த ஒத்​திகை நடத்​தப்​பட்​டது. மேலும், ராணுவம் தரப்​பில் காஷ்மீரின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று என்​க​வுன்ட்​டர்​கள் நடத்​தப்​பட்​டன. இதுகுறித்த தகவல்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை.

    ஜம்மு காஷ்மீரில் மீண்​டும் தீவிர​வாத தாக்​குதல் நடத்த தீவிர​வாத அமைப்​பு​கள் சதித் திட்​டம் தீட்​டி​யிருப்​ப​தாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்​துள்​ளது. இதையடுத்​து, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக காஷ்மீரில் 48 சுற்​றுலாத் தலங்​கள் மூடப்பட்டுள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

    June 29, 2025
    தேசியம்

    புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

    June 29, 2025
    தேசியம்

    மார்ச் 2026-க்குள் மாவோயிஸம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும்: அமித்ஷா சூளுரை

    June 29, 2025
    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு
    • புதியவர்களுக்கு முழு ஒத்துழைப்பு: புதுச்சேரி பாஜக மாநில செயற்குழுவில் உத்தரவு
    • புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ ஃபாரெவர்’
    • திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வருக்கு பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
    • ‘லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகல்: பின்னணி என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.