Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு ரூ.430 கோடியில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு 
    ஆன்மீகம்

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு ரூ.430 கோடியில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு 

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு ரூ.430 கோடியில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 2022 -2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2024-2025 100 கோடி என்று ரூ.300 கோடியை 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நிதியை வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

    தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 18) வினா – விடை நேரத்தின்போது, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த கோயில் மூன்று துறைகளின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு இன்றும் திருப்பணி நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது: “இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் தமிழக முதல்வர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 2022 -2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2024-2025 100 கோடி என்று ரூ.300 கோடியை 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நிதியை வழங்கியுள்ளார்.

    அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆட்சியின் நீட்சியாக இந்த ஆண்டும் கூடுதலாக நிதியினை வழங்க முதல்வர் ஒப்புதல் தந்திருக்கின்றார். ஒட்டுமொத்தமாக 507 கோயில்களை ஆவணப்படுத்தி இருக்கிறோம்.

    தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சி இருக்கின்றபோதே இந்த அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்படும் என்பதை அறுதியிட்டு உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அந்த வகையில் உறுப்பினர் கோரிய அனைத்து பணிகளையும் நிச்சயமாக நிறைவேற்றித் தரப்படும்,” என்று அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திரிபுராவில் பிரதமர் திறந்துவைக்கும் திரிபுர சுந்தரி கோயில்: மத்திய அரசால் ரூ.52 கோடியில் புனரமைப்பு

    September 22, 2025
    ஆன்மீகம்

    மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்

    September 22, 2025
    ஆன்மீகம்

    மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

    September 21, 2025
    ஆன்மீகம்

    நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்

    September 21, 2025
    ஆன்மீகம்

    நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்

    September 21, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
    • வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை
    • 8 எளிய நீரிழிவு மேலாண்மை பழக்கம்: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சான்றுகள் அடிப்படையிலான வாழ்க்கை முறை மாற்றங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எச் -1 பி விசா உயர்வில் எலோன் மஸ்கின் குழப்பம்: ஒரு முறை எச் -1 பி வைத்திருப்பவர், குடியேற்ற எதிர்ப்பு ‘மேசியா’ மற்றும் பல எச் -1 பி தொழிலாளர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு: 30 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.