Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்: பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? 
    தேசியம்

    முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்: பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? 

    adminBy adminApril 30, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்: பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான் மற்​றும் ராணுவம், கடற்​படை, விமானப்​படை தளப​தி​கள், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் ஆகியோ​ருடன் பிரதமர் மோடி நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். எப்​போது, எங்​கு, எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம் என்​றும், முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம் என்​றும் இக்​கூட்​டத்​தில் பிரதமர் தெரி​வித்​தார்.

    கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் அந்​நாட்டு உளவுத் துறை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் இரு நாடு​களிடையே போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

    இந்த சூழலில், மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான், ராணுவ தளபதி உபேந்​திர திவிவே​தி, கடற்​படை தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்​லி​யில் நேற்று பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​தனர்.

    பிரதமரின் இல்​லத்​தில் சுமார் 90 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. அப்​போது, பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக​வும், அதற்கு தக்க பதிலடி கொடுப்​பது குறித்​தும் விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி பேசும்​போது, “தீ​விர​வாதத்தை வேரறுக்க வேண்​டும். பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்​டும். எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது, எந்த இடங்​களில் தாக்​குதல் நடத்த வேண்​டும், எப்​போது தாக்​குதல் நடத்த வேண்​டும் என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம். இந்த விவ​காரத்​தில் முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம்” என்று தெரி​வித்​தார்​.

    அமித் ஷா ஆலோசனை: ​முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், மத்​திய உள்​துறைச் செயலர் கோவிந்த் மோகன், எல்லை பாது​காப்​புப் படை, அசாம் ரைபிள்​ஸ், தேசிய பாது​காப்​புப் படை, மத்​திய ரிசர்வ் போலீஸ் படை, மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யின் தலை​வர்​கள், இயக்​குநர்​கள் பங்​கேற்​றனர். இந்​த கூட்​டத்​தில் ஜம்மு காஷ்மீரில் மேற்​கொள்​ளப்​படும் தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கைகள் குறித்து விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

    ஜம்மு காஷ்மீர் பகு​தி​யில் இந்​திய ராணுவ​மும், மத்​திய ஆயுத போலீஸ் படை​யும் நேற்று போர் பயிற்​சி​யில் ஈடு​பட்​டன. இது தொடர்​பான புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. மேலும், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்​லைப் பகு​தியை சேர்ந்த கிராம மக்​களுக்கு ராணுவம் சார்​பில் நேற்று சிறப்பு பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன.

    காஷ்மீரின் ஜம்மு பகு​தி​யில் தேசிய பாது​காப்பு படை (என்​எஸ்​ஜி) கமாண்​டோக்​கள், மாநில போலீ​ஸார் இணைந்து பாது​காப்பு ஒத்​தி​கையை நடத்​தினர். ஜம்மு பகு​தி​யில் உள்ள இந்து கோயில்​களில் இந்த ஒத்​திகை நடத்​தப்​பட்​டது. மேலும், ராணுவம் தரப்​பில் காஷ்மீரின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று என்​க​வுன்ட்​டர்​கள் நடத்​தப்​பட்​டன. இதுகுறித்த தகவல்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை. ஜம்மு காஷ்மீரில் மீண்​டும் தீவிர​வாத தாக்​குதல் நடத்த தீவிர​வாத அமைப்​பு​கள் சதித் திட்​டம் தீட்​டி​யிருப்​ப​தாக உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதையடுத்​து, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக காஷ்மீரில் 48 சுற்​றுலாத் தலங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.

    காஷ்மீரில் புதிய தளபதி: ​காஷ்மீரின் உதம்​பூரில் இந்​திய ராணுவத்​தின் வடக்கு பிராந்​திய தலைமை அலு​வல​கம் அமைந்​துள்​ளது. காஷ்மீர், லடாக் எல்​லைப் பகுதி கட்​டுப்​பாடு முழு​வதும் வடக்கு பிராந்​தி​யத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. இந்த பிராந்​திய தளப​தி​யாக லெப்​டினென்ட் ஜெனரல் சுசீந்​திர குமார் பணி​யாற்றி வந்​தார். அவர் விரை​வில் ஓய்வு பெற உள்​ளார்.

    இந்த சூழலில் ராணுவ வடக்கு பிராந்​திய தளப​தி​யாக லெப்​டினென்ட் ஜெனரல் சர்மா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர் விரை​வில் அதி​காரப்​பூர்​வ​மாக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

    துப்பாக்கி சண்டை: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பிறகு இந்​திய, பாகிஸ்​தான் எல்​லை​யில் அசா​தாரண சூழ்​நிலை நில​வு​கிறது. உரி, நவு​கம், ராம்​பூர், கெரன், குப்​வா​ரா, பூஞ்ச் உள்​ளிட்ட எல்​லைப் பகு​தி​களில் கடந்த 4 நாட்​களாக இந்​திய,பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு இடையே கடும் துப்​பாக்​கிச்சண்டை நடை​பெற்று வரு​கிறது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக எல்​லைப் பகுதி மக்​கள் பதுங்கு குழிகளை அமைத்​துள்​ளனர். பல்​வேறு கிராமங்​களில் ராணுவத்​தின் உதவி​யுடன் மிகப்​பெரிய ரகசிய பதுங்கு அறை​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த பதுங்கு அறை​களில் சமையலறை, கழிப்​பறை, படுக்கை வசதி, பிரிட்ஜ் உள்​ளிட்ட அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன. ஒரு மாதத்​துக்​கு தேவை​யான மளி​கைப் பொருட்​களும் சேகரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 2, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்
    • அஜித்குமார் கொலை வழக்கு: ஜூலை 3-ல் சென்னையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
    • தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: ஜூலை 3-ல் தீர்ப்பு
    • திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? – முதல்வர் ஸ்டாலின் பதில்
    • அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.