Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் நடவடிக்கைக்கு காத்திருக்கும் மக்கள்
    மாநிலம்

    புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் நடவடிக்கைக்கு காத்திருக்கும் மக்கள்

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் நடவடிக்கைக்கு காத்திருக்கும் மக்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீடு, அவர் வீட்டருகே கட்டியுள்ள அப்பா பைத்தியசாமி கோயில், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியிலுள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பல இடங்களுக்கு தொடர் மிரட்டல் விடுக்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மீண்டும், மீண்டும் மிரட்டல்கள்: இந்நிலையில் இன்று (ஏப்.29) முதல்வர் ரங்கசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இம்மிரட்டல் இம்மாதத்தில் 2-வது முறையாக வருகிறது. அவர் வீட்டடுக்கு அருகே ரங்கசாமி கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் அங்கும் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் பிரெஞ்சு தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இங்கும் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மிரட்டல் வந்து சோதனை நடந்தது. இச்சூழலில் ஜிப்மர் மருத்துவமனைக்கும் மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். ஜிப்மர் மருத்துவமனைக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்து சோதனை நடந்தது.

    போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் மருத்துவமனை முழுவதும் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள், அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல் முல்லா வீதியில் உள்ள குப்தா பள்ளி வாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்து சோதனை நடந்தது. மேலும் புதுச்சேரியில் தொடர் வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ‘திணறும் போலீஸ்’ – பொதுமக்கள் தரப்பில், “தொடர்ந்து புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, முதல்வர் ரங்கசாமி வீடு, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள்,நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள் என இம்மாதம் முழுக்க தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் தீயணைப்புத் துறைக்கு போனில் மிரட்டல் விட்டவரை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.

    இதர இடங்களுக்கு இ-மெயிலில் தொடர்ந்து மிரட்டல் விடுபவரை பிடிக்க சைபர் க்ரைம் போலீஸார் முயற்சி எடுத்தனர். அதில் முடியாததால் மத்திய சைபர் க்ரைமை நாடினர். எனினும் தொடர்ந்து மிரட்டல் வருபவரை பிடிக்க, போலீஸார் உரிய விரைவான நடவடிக்கை எடுக்காததால் தவிப்புக்கு ஆளாகியுள்ளோம்.” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்தது ஏன்?

    July 3, 2025
    மாநிலம்

    தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி

    July 3, 2025
    மாநிலம்

    தனிப்படை போலீஸ் விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த அதிகாரி யார்? – காவல் துறை தெளிவுபடுத்த கோரிக்கை

    July 3, 2025
    மாநிலம்

    நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்: திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம்

    July 3, 2025
    மாநிலம்

    காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்

    July 3, 2025
    மாநிலம்

    சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கட்சி பதவி பறிப்பு: அன்புமணி திடீர் நடவடிக்கை

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு
    • எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்தது ஏன்?
    • ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்க ஏ.யு.ஸ்மால் பைனான்ஸ் வங்கி, எல்ஐசி இணைந்து செயல்படும்
    • அசாமில் நடந்த சோதனையில் 1,000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்: மாநிலம் முழுவதும் 132 பேர் கைது
    • ட்ரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் இந்தியர்கள் எண்ணிக்கை 70% குறைந்தது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.