Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இரு தரப்பினர் இடையே சர்ச்சை: கண்ணகி கோயில் கொடியேற்றத்துக்கு வனத்துறை அனுமதி மறுப்பு
    மாநிலம்

    இரு தரப்பினர் இடையே சர்ச்சை: கண்ணகி கோயில் கொடியேற்றத்துக்கு வனத்துறை அனுமதி மறுப்பு

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இரு தரப்பினர் இடையே சர்ச்சை: கண்ணகி கோயில் கொடியேற்றத்துக்கு வனத்துறை அனுமதி மறுப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கூடலூர்: கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் இரு தரப்புக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் கொடியேற்றத்துக்கு அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். வெளியாட்கள் வருவதைத் தடுக்க வனத்துறை கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கண்ணகி கோயில் மலையடிவாரமான பளியன்குடியில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

    இதற்காக மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் இன்று (ஏப்.29) கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர். அப்போது இன்னொரு பிரிவினரும் கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர். இதனால் கொடியேற்றுவதில் இருதரப்பினர் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் முரளீதரன் காவல் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வருவாய்த் துறையினர்

    தகவலறிந்து, உத்தமபாளையம் வட்டாட்சியர் கண்ணன், உதவிகாவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஒருமணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பினருமே கொடியேற்ற வேண்டும் என்று கூறியதால் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பளியன்குடியில் உள்ள வனப்பாதை இரும்பு கதவுகள் பூட்டப்பட்டன.

    வெளியாட்கள் இங்குவர தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்குச் சென்று கொடியேற்றினர். இதற்காக பச்சை மூங்கிலில் கண்ணகியின் உருவம் பொறித்த மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினர்.

    கம்பத்தில் உள்ள அலுவலகத்தில் கொடியேற்றிய மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள்.

    இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் சில பிரிவினர் கொடியேற்றம், அன்னதானம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இருப்பினும் கொடியேற்றத்தில் இருதரப்பிலும் சர்ச்சை ஏற்பட்டது. ஆகவே பிரச்சினை ஏற்படும் என்று கருதி பளியன்குடி கொடியேற்றத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்,” என்றனர்.

    இதுவரை பாரம்பரியமாக பளியன்குடியில் மலைவாழ் மக்களை ஒருங்கிணைத்து கொடியேற்றம் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு இந்நிகழ்ச்சி நடைபெறாததால் பக்தர்கள் வருத்தம் அடைந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மருத்துவர் தினத்தையொட்டி 50 மருத்துவர்களுக்கு விருது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

    July 2, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

    July 2, 2025
    மாநிலம்

    ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளாததே பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    July 2, 2025
    மாநிலம்

    திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

    July 2, 2025
    மாநிலம்

    ஆளுநர் ரவி டெல்லி பயணம்

    July 2, 2025
    மாநிலம்

    கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா திரும்பிச் செல்ல நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை
    • மருத்துவர் தினத்தையொட்டி 50 மருத்துவர்களுக்கு விருது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
    • 5 மாதவிடாய் பிடிப்புகளைக் குறைக்க உதவும் பண்டைய தேநீர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெசோஸ் ஆதரவு மீத்தேன்-கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்வெளியில் இழந்தது-இந்தியாவின் நேரங்கள்
    • காற்றுத் தர மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி டெல்லியில் 62 லட்சம் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படவில்லை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.