Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
    தேசியம்

    சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் நடைபெற்ற பாரத் ஜோடோ நடைப்பயணத்தின்போது செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசினார். அப்போது வீர சாவர்க்கர் குறித்து ராகுல் அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் போன்றோர் சிறையில் வாடியிருந்தபோது, சாவர்க்கர் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாகவும், முஸ்லிம் நபர் ஒருவரை சாவர்க்கர் தாக்கியதாக சாவர்க்கரின் புத்தகத்திலேயே குறிப்பிட்டதாக ராகுல் காந்தி அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதனையடுத்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு அலகாபாத் நீதிமன்றத்தில் ராகுல் மனு அளித்தார். இருப்பினும், அவரது மனுவை அலகாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். தன் மீதான அவதூறான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுதந்திரமாக தனது கடமையைச் செய்ய தடையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:

    எதிர்க்கட்சித் தலைவராக ராகுலின் கருத்துகள் பொறுப்பற்றவையாகக் கொள்ளப்படுகின்றன. இனிவரும் காலங்களில், இவ்வாறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் கேலி செய்ய வேண்டாம்.

    சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த முறை சாவர்க்கர், அடுத்த முறை மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் ஊழியர் என்று யாராவது கூறுவார்கள். மகாத்மா காந்தி கூட ஆங்கிலேயர்களைத் தொடர்புகொண்டபோது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்று குறிப்பிட்டது, ராகுல் காந்திக்கு தெரியுமா?

    ஆங்கிலேயருக்கு, காந்தி எழுதிய கடிதத்தில் ஃபெய்த்புல் சர்வன்ட் (Faithful servant) என்ற வார்த்தையே பயன்படுத்தி இருந்தார். அப்படியென்றால் காந்தி ஆங்கிலேயருக்கு வேலைக்காரர் என்று அர்த்தமா?.. அப்படித்தான் பொருள்படுமா?

    மகாராஷ்டிர மாநிலத்தில் வீர சாவர்க்கரை அனைவரும் போற்றுகின்றனர். எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற வகையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம்.

    இதுபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற அவதூறு கருத்துக்களை வருங்காலத்தில் பேசினால் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் ராகுல் காந்தி மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

    June 29, 2025
    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    June 29, 2025
    தேசியம்

    தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குந்துகைகள் Vs சுவர் அமர்: உடனடி எடை இழப்புக்கு எது சிறந்தது?
    • ‘சூர்யா 46’ கதைக்களம் என்ன? – இயக்குநர் வெங்கி அட்லுரி வெளிப்படை
    • இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    • 7 விளையாட்டு மாற்றும் ரகசியங்கள் செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்காக ஆழ் மனதை மாற்றியமைக்க
    • பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.