Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»சரஸ்வதி புஸ்கரம்: சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்துக்கு சிறப்பு ரயில்
    ஆன்மீகம்

    சரஸ்வதி புஸ்கரம்: சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்துக்கு சிறப்பு ரயில்

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சரஸ்வதி புஸ்கரம்: சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்துக்கு சிறப்பு ரயில்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பத்ரிநாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சரஸ்வதி புஸ்கரம் விழாவுக்கு தமிழக மக்களை அழைத்து செல்லும் வகையில், பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்-க்கு சிறப்பு ரயில் மே 8-ம் தேதி இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து உத்தராகண்ட் மாநில சுற்றுலா நிறுவன மக்கள்தொடர்பு அதிகாரிகள் விரேந்திர சிங் ராணா, சுனில் ராஜூ (சென்னை) ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியது:“உத்தராகண்ட் சுற்றுலா கழகம், இந்திய ரயில்வே பாரத் கவுரவ் ரயில் சார்பில், சரஸ்வதி புஷ்கரத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து பத்ரிநாத், கேதர்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் சரஸ்வதி ஆறு ஓடுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் மே மாதத்தில் சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக பயணிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    16 நாட்கள் கொண்ட இந்த சிறப்பு ரயிலில் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், உத்தராகண்ட் மாநிலத்தின் பிற கோயில்களை தரிசிக்கலாம். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, மூன்றடுக்கு, இரண்டடுக்கு, முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் ஒருவருக்கு கட்டணம் ரூ.58,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி, தென்னிந்திய சைவ உணவு, பயண காப்பீடு, மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    உத்தராகண்ட் சுற்றுலா கழகம் இணைந்துள்ளதால், பயணிகள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவார்கள். இந்த சுற்றுலா ரயில் தமிழகத்தில் இருந்து முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு www.tourtimes.in என்ற இணையதளம் மூலமாகவும், 7305858585 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம்” என்று அவர்கள் கூறினர்.இந்த சந்திப்பின்போது, டூர்டைமஸ் சவுத் ஸ்டார் திட்ட இயக்குநர் விக்னேஷ் உடன் இருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

    July 1, 2025
    ஆன்மீகம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

    June 30, 2025
    ஆன்மீகம்

    பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

    June 29, 2025
    ஆன்மீகம்

    அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்

    June 29, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்

    June 28, 2025
    ஆன்மீகம்

    அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா!

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    • ‘நடக்கக் கூடாதது நடந்துவிட்டது…’ – அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
    • ‘பணம் இல்லாத 7 நாட்கள்’: மர்மமான காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு இந்திய -ஆரிஜின் சிட்னி டீனேஜர் அனிஷா சதிக் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சாத்தான்குளம் சம்பவத்துக்கு பொங்கியவர்கள் மடப்புரம் விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?
    • மீண்டும் தீ வரிசையில் உள்ள சர்வதேச மாணவர்கள்: விசா பதவிக்காலத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகி முன்மொழிகிறார் – இந்தியாவின் நேரங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.