Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2 முதல் மாற்றம்!
    மாநிலம்

    சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2 முதல் மாற்றம்!

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2 முதல் மாற்றம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் , 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஏசி மின்சார ரயிலில் பல வசதிகள் இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த ரயில் நேரத்தை மாற்றி அமைக்கவும் கருத்துகள் எழுந்தன.

    இதற்கிடையில், பொதுமக்களிடம் கருத்துகளை ரயில்வே நிர்வாகம் கேட்டது. இதுதவிர, கள ஊழியர்களின் நேரடி தொடர்பு மூலம் பயணிகளின் பதில்கள் பெறப்பட்டன. அலுவலகம் செல்பவர்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை ரயில் (49004 ) வருகை நேரத்தை முன்கூட்டியே அதிகரிப்பதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாலையில் அலுவலகம் முடித்து, செல்வோர் வசதிக்காக ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. பயணிகளின் இக்கருத்துகளுக்கு ஏற்ப, ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது.

    முதல் ஏசி மின்சார ரயில் சேவை, தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுவை காலை 7.35 மணிக்கு சென்றடையும். 2-வது ஏசி மின்சார ரயில் சேவை, செங்கல்பட்டு-வில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை காலை 9.25 மணிக்கு வந்தடையும். 3-வது சேவை, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.41 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை காலை 10.36 மணிக்கு அடையும். 4-வது ரயில் சேவை, தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை மதியம் 1.55 மணிக்கு அடையும்.

    5-வது ரயில் சேவை, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு மாலை 4 மணிக்கு அடையும். 6-வது ரயில் சேவை, செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். 7-வது ஏசி மின்சார ரயில் சேவை, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.17 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுவை இரவு 7.50 மணிக்கு அடையும்.

    8-வது ரயில் சேவை, செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை இரவு 8.50 மணிக்கு அடையும். ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மாற்றத்துக்கு ஏற்ப, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 2 மின்சார ரயில்கள், கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் ஒரு மின்சார ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, 4 ஏசி மின்சார ரயில் சேவை மட்டும் ஏப்.2-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருசூலத்தில் தற்காலிகமாக நின்று செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    June 29, 2025
    மாநிலம்

    “ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

    June 29, 2025
    மாநிலம்

    ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ – ஜூலை 7 முதல் பழனிசாமி சுற்றுப்பயணம்

    June 29, 2025
    மாநிலம்

    வாக்குச்சாவடி நிலைய முகவராக மாவட்ட செயலாளர்கள் நியமனம்: திருமாவளவன் தகவல்

    June 29, 2025
    மாநிலம்

    பெண் ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கினார் ஆளுநர்

    June 29, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் மட்டும் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.19,000 கோடி திட்டங்கள்: தமிழக அரசு பெருமிதம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உணவின் போது முதலில் காய்கறிகளை சாப்பிடுவது ஏன் முக்கியம்? ஒரு விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டொனால்ட் டிரம்ப் Vs எலோன் மஸ்க் பகுதி 2: தொழில்நுட்ப கோடீஸ்வரர் வாதத்தை மறுதொடக்கம் செய்கிறார்; ‘பெரிய பில் அழகான’ முற்றிலும் பைத்தியம் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்
    • ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
    • எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.