Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»குரூப்-1 தேர்வு அறிவிப்பு நாளை வெளியீடு: முதல் முறையாக தொழிலாளர் உதவி ஆணையர் பதவி சேர்ப்பு
    கல்வி

    குரூப்-1 தேர்வு அறிவிப்பு நாளை வெளியீடு: முதல் முறையாக தொழிலாளர் உதவி ஆணையர் பதவி சேர்ப்பு

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குரூப்-1 தேர்வு அறிவிப்பு நாளை வெளியீடு: முதல் முறையாக தொழிலாளர் உதவி ஆணையர் பதவி சேர்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (ஏப்.1) வெளியிடப்படுகிறது. முதல் முறையாக குரூப்-1 பதவிகளுடன் தொழிலாளர் உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

    முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கிய இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டிஎன்பிஎஸ்சி-யின் 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டணையில், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்பட்டு முதல்நிலைத்தேர்வு ஜுன் 15-ம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளளது. அதன்படி, குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (ஏப்.1) வெளியிடப்படுகிறது.

    இதனிடையே, குரூப்-1 கேடரில் இதுவரை தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு குரூப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும் என கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, குருப்-1 தேர்வுடன் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது.

    தமிழக அரசுக்கு வேண்டுகோள்: முன்பு தனி தேர்வாக நடத்தப்பட்டுவந்த தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வெழுத இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. ஆனால், தற்போது குரூப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படுவதால் வயது வரம்பு கட்டுப்பாடு இந்த பதவிக்கும் பொருந்தும். முன்பு தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வை தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது தொழிலாளர் மேலாண்மையில் டிப்ளமா பெற்ற பட்டதாரிகள் மட்டுமே எழுத முடியும்.

    ஆனால், புதிதாக வெளியிடப்பட்ட அரசாணையின்படி, குரூப்-1-ல் அடங்கிய பதவிகளைப் போன்று ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மட்டும் இதற்கு போதுமானது.தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வு கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. 2023 டின்பிஎஸ்சி தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற தொழிலாளர் உதவி தேர்வு திட்டமிட்டபடி அந்த ஆண்டு நடத்தப்படவில்லை. அதோடு அடுத்துவந்த 2024 தேர்வு அட்டவணையிலும் அத்தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறவில்லை.

    தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் பெற்றவர்களும், டிப்ளமா பெற்றவர்களும் கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வை எதிர்பார்த்து படித்து வருகின்றனர். எனவே, அவர்களின் நலனை கருத்திலகொண்டு தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் அல்லது டிப்ளமா பெற்றவர்களுக்கு குரூப்-1-தேர்வுக்கான வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தடவையாவது வயது வரம்பு தளர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு ஆரம்பம்

    July 1, 2025
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 73,000 பேர் விண்ணப்பம்: தரவரிசை பட்டியல் சில தினங்களில் வெளியீடு

    July 1, 2025
    கல்வி

    மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்

    July 1, 2025
    கல்வி

    மாற்று பாலினத்தோருக்கு உயர்கல்வி இலவசம்; விடுதிக் கட்டணம் இல்லை: விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அழைப்பு

    June 30, 2025
    கல்வி

    பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத் துறை அறிவிப்பு

    June 30, 2025
    கல்வி

    கடின உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்: உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சியில் போட்டித் தேர்வர்கள், மாணவர்களுக்கு அறிவுரை

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    • ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
    • புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி: முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி
    • பீட்ரூட் சாறு முதல் எலுமிச்சை நீர் வரை: சிறந்த ஹார்வர்ட் டாக்டர் கல்லீரல் ஆரோக்கியத்திற்காக 9 சிறந்த மற்றும் மோசமான பானங்கள்
    • பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.