Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு!
    தேசியம்

    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு!

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீட்டை பாது​காப்​புப் படை​யினர் வெடி​வைத்து தகர்த்​தனர்.

    காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 28 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்​தத் தாக்​குதலில் பாகிஸ்​தானின் லஷ்கர் பயங்கரவாத இயக்​கத்​தின் 4 தீவிர​வா​தி​கள் சம்​பந்​தப்​பட்​டிருப்​பது தெரிய வந்​துள்​ளது. இவர்களின் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது.

    மேலும் அனந்தநாக் பகுதியில் உள்ள ஆதில், ஆசிப் என்ற இரண்டு பயங்கரவாதிகள் வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்​தினர். அப்​போது, ஒரு வீட்​டில் ஏராள​மான வெடிபொருட்​கள் மறைத்து வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து அந்த வெடிப்​பொருட்​களை பாது​காப்​புப் படை வீரர்​கள் வெடிக்க செய்​தனர். இதில் ஒரு வீடு தரைமட்​ட​மானது. மற்​றொரு வீடு புல்​டோசர் மூலம் இடிக்​கப்​பட்​டது என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

    இந்த நிலையில், வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் கலாரூஸ் பகுதியில் ஃபரூக் அகமது தத்வா என்ற மற்றொரு பயங்கரவாதியின் வீடு அதிகாரிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் ஆறு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றவர்களுக்கு எதிராகவும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் காஷ்மீரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைகளில் ஆயுதங்கள், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இயற்கை எழில் கொஞ்சும் பஹல்காம், இந்தியாவின் ’மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இங்கு திடீரென 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

    June 29, 2025
    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    June 29, 2025
    தேசியம்

    தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ ஆக.1-ல் ரிலீஸ்! – படக்குழு அறிவிப்பு
    • திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    • ஷெபாலி ஜாரிவாலா மரணம்: வெறும் வயிற்றில் மருந்து எடுத்துக்கொள்வது ஆபத்தானது? நிபுணர்கள் ஏன் அதற்கு எதிராக அறிவுறுத்துகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்
    • திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.