Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சுற்றுலா பயணிகளிடம் மன்னிப்பு கேட்க வார்த்தையில்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை
    தேசியம்

    சுற்றுலா பயணிகளிடம் மன்னிப்பு கேட்க வார்த்தையில்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை

    adminBy adminApril 29, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுற்றுலா பயணிகளிடம் மன்னிப்பு கேட்க வார்த்தையில்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளை அழைத்தேன். ஆனால் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப முடியாமல் போய்விட்டது. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:

    காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலில் சிலர் தந்தையை இழந்துள்ளனர். சிலர் மகனை இழந்துள்ளனர். இதில் அண்ணன், தம்பியை இழந்துள்ளனர்.

    அண்மையில் திருமணமாகி தேனிலவுக்கு காஷ்மீர் வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவிக்கு நான் என்ன பதில் கூறுவேன்? 10 வயது சிறுவன் தனது கண் முன்னே தந்தையை இழந்துள்ளார். அந்த சிறுவனுக்கு என்னால் எப்படி ஆறுதல் கூற முடியும்?

    பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல், காஷ்மீர் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாட்டின் அனைத்து பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

    காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளுக்கு நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப முடியாமல் போய்விட்டது. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. காஷ்மீரின் சட்டம், ஒழுங்கு, சுற்றுலா துறை எனது வசம் இருக்கிறது. சுற்றுலா பயணிகளை பாதுகாக்க நான் தவறிவிட்டேன். அதற்காக மிகுந்த வேதனை அடைகிறேன்.

    நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு என்ன பதில் கூறுவேன்? காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். அவர்களை வரவேற்பது, பாதுகாப்பது நமது கடமை ஆகும். தீவிரவாதத்தை காஷ்மீர் மக்கள் விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் காஷ்மீர் பண்டிட்டுகள், சீக்கியர்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக இப்போதுவரை பரிதவிக்கிறேன்.

    இந்த நேரத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக கோஷமிடுங்கள், பதாகைகளை ஏந்துங்கள். நாம் ஒன்றிணைந்தால் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும்.

    உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரவாத பிரச்சினை நீடிக்கிறது. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நம்மால் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும், கட்டுப்படுத்த முடியும். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிராகவும் அனைத்து மசூதிகளிலும் மவுன அஞ்சலி அனுசரிக்க வேண்டும்.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலின்போது சுற்றுலா பயணிகளை பாதுகாக்க சையது அடில் ஹூசைன் ஷா என்ற இளைஞர் மிகக் கடுமையாக போராடி உள்ளார். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது பலரும் தங்கள் உயிரை காப்பாற்ற ஓடியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் ஓடி, ஒளியவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி உள்ளார். இந்த போராட்டத்தில் தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.

    தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த உள்ளூர் மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து உள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கி உள்ளனர். உள்ளூர் கார் ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகளை இலவசமாக அழைத்து சென்றுள்ளனர். ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் இலவசமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நாம் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். காஷ்மீரின் விருந்தோம்பலில் அவர்களை நெகிழ செய்ய வேண்டும்.

    காஷ்மீரில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநில அந்துஸ்து கோரி வருகினேன். ஆனால் இந்த துயரமான நேரத்தில் எனது கோரிக்கையை வலியுறுத்த மாட்டேன். காஷ்மீரை கட்டி எழுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் தொடங்கிவிட்டது.

    பல்வேறு மாநிலங்களில் கல்வி பயிலும் காஷ்மீர் மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தந்த மாநில அரசுகள், காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் உமர் அப்துல்லா பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அயோத்தி, ராமேஸ்வரம் உட்பட 30 புனித தலங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுப்பயணம்: ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு

    July 6, 2025
    தேசியம்

    நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற காங். முயற்சி – ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதம்

    July 6, 2025
    தேசியம்

    அமர்நாத் யாத்திரையில் பேருந்துகள் மோதல்: 36 பக்தர்கள் காயம்

    July 6, 2025
    தேசியம்

    “புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” – தலாய் லாமா

    July 6, 2025
    தேசியம்

    மருத்துவ கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க கோடிக்கணக்கில் லஞ்சம்: மடாதிபதி உட்பட 35 பேர் மீது சிபிஐ வழக்கு

    July 6, 2025
    தேசியம்

    “ஒன்றிணைத்த பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி!” – ராஜ் தாக்கரேவுக்கு ஃபட்னாவிஸ் பதில்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவுக்கு தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் ஸ்டாலின் கருத்து
    • ஒவ்வொரு நாளும் நீங்கள் உண்மையில் எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? (குறிப்பு: இது நீங்கள் நினைப்பதை விட குறைவு) | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அயோத்தி, ராமேஸ்வரம் உட்பட 30 புனித தலங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுப்பயணம்: ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு
    • அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து: என்ன காரணம்?
    • சியா விதைகளை இரண்டு வாரங்களுக்கு சாப்பிடுவதன் ஆச்சரியமான நன்மைகளை அமெரிக்க டாக் வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.