Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»அழகர்கோவில் சித்திரைத் திருவிழா: மே 12-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு!
    ஆன்மீகம்

    அழகர்கோவில் சித்திரைத் திருவிழா: மே 12-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு!

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அழகர்கோவில் சித்திரைத் திருவிழா: மே 12-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12-ம் தேதி நடைபெறுகிறது.

    உலகப் புகழ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள். சைவம், வைணவத்தின் இணைப்புத் திருவிழாவாக நடைபெறும் இத்திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை பக்தி பரவசத்துடன் கள்ளழகரை வரவேற்பார்கள். அத்தகைய சிறப்புக்குரிய சித்திரைத் திருவிழா குறித்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.ஆர்.வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ந.யக்ஞநாராயணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அழகர்கோவிலில் கள்ளழகர் கோயிலில் மே 8-ம் தேதி வியாழக்கிழமை கோயிலில் சுந்தரராஜபெருமாள் சுவாமி புறப்பாடுடன் ஆரம்பமாகிறது. மே09-ம் தேதி 2-ம் நாள் சுவாமி புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து மூன்றாம் நாள் மே 10-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்குமேல் 6.15 மணிக்குள் கோயிலிலிருந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார்.

    நான்காம் நாள் மே 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை மாநகரான மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சூட்டிக்கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரை வாகனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மே 12-ம் தேதி திங்கள்கிழமை சித்திரை மாத பவுர்ணமியன்று அதிகாலை 5.45 மணிக்குமேல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடைபெறும்.அண்ணா நகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருள்கிறார்.

    ஆறாம்நாள் மே 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுதல், பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.

    ஏழாம் நாள் மே 14-ம் தேதி அதிகாலை மோகனாவதாரத்தில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார்.அன்று பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதல், இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு அலங்காரம் நடைபெறும். எட்டாம் நாள் மே 15-ம் தேதி மதுரையிலிருந்து அழகர்மலைக்கு புறப்படுகிறார்.

    ஒன்பதாம் நாள் மே 16-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குமேல் 10.25 மணிக்குள் இருப்பிடம் சென்றடைகிறார்.பத்தாம் நாள் மே 17-ம் தேதி உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வி.ஆர்.வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ந.யக்ஞநாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

    July 3, 2025
    ஆன்மீகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    July 3, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானைக்கு மணிமண்டபம்!

    July 2, 2025
    ஆன்மீகம்

    ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

    July 1, 2025
    ஆன்மீகம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

    June 30, 2025
    ஆன்மீகம்

    பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூர்யா சேதுபதியின் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!
    • தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் ‘யுமிஸ்’தளம் வாயிலாக 9.40 லட்சம் மாணவர்கள் பயன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
    • தேஜாஸ்-எம்.கே. இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கூலி’ படத்தில் ஆமிர்கான் கதாபாத்திர லுக் வெளியானது!
    • நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி: கிருஷ்ணகிரியில் அறிமுகம் – சிறப்பு அம்சம் என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.