Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காம் தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை
    தேசியம்

    பஹல்காம் தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

    adminBy adminApril 28, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கடந்த 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சூழலில் என்ஐஏ சார்பில் நேற்று முன்தினம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர்.

    தாக்குதலின்போது அவர்களோடு இருந்த குடும்பத்தினரிடம் என்ஐஏ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இதற்காக அந்தந்த மாநிலங்களில் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரிக்கின்றனர்.

    இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பகுதியில் என்ஐஏ தடயவியல் நிபுணர்கள் முக்கிய ஆதாரங்களை சேகரித்து உள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய 5 தீவிரவாதிகளின் வரைபடங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு உள்ளன. அவர்களை குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயங்கி வரும் 14 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அவர்களையும் தீவிரமாக தேடி வருகிறோம். சுமார் 200 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    பஹல்காம் பகுதியில் குதிரைகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் நபர்கள், அந்த பகுதிகளில் உணவகம், கடைகளை நடத்தும் நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 6 மாதங்களாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டிருப்பதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் காலித் குவாதுமி, நாஜி ஜாகீர், முப்தி ஆசம் ஆகியோர் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை சந்தித்து பேசி உள்ளனர்.

    இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளான தல்கா சயீப், அஸ்கர் கான், மசூத் இலியாஸ் ஆகியோர் ஹமாஸ் தீவிரவாத தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகள் பாணியில் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து உளவுத் துறை உதவியுடன் தீவிர விசாரணை நட்ததி வருகிறோம்.

    பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருக்கிறது. இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

    ராணுவம், காஷ்மீர் காவல் துறையுடன் இணைந்து காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பல்வேறு வீடுகளில் சோதனை நடத்தி வருகிறோம். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த மாநிலங்களை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

    காஷ்மீரை சேர்ந்த ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலை 5 தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இவர்கள் காஷ்மீரின் டிரால் வனப்பகுதியில் இருந்து பஹல்காம் பகுதிக்கு வந்துள்ளனர். சாலை வழியாக டிரால் நகரில் இருந்து பஹல்காம் வருவதற்கு 55 கி.மீ. தொலைவை கடக்க வேண்டும். பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் இருப்பதால் 5 தீவிரவாதிகளும் வனப்பகுதி வழியாகவே டிரால் நகரில் இருந்து பஹல்காம் வந்துள்ளனர்.

    உள்ளூரை சேர்ந்த சிலரின் துணை இல்லாமல் 5 தீவிரவாதிகளும் வனப்பகுதியை கடந்து வந்திருக்க முடியாது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். பஹல்காம் பகுதியில் சுமார் 300 கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீவிரவாதிகள் பதுங்கல்: மிக நீண்ட காலமாக டிரால் வனப்பகுதி தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது. தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் இந்த வனப்பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். எனவே டிரால் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிரதமர், முதல்வரை நீக்க வகை செய்யும் மசோதா: கடும் அமளிக்கிடையே மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்

    August 21, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி முன்னிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்

    August 21, 2025
    தேசியம்

    இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

    August 20, 2025
    தேசியம்

    10 ஆண்டுகளில் கடத்தலில் பிடிபட்ட தங்கம் எவ்வளவு? – மத்திய அரசு தகவல்

    August 20, 2025
    தேசியம்

    அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு வாதம்

    August 20, 2025
    தேசியம்

    “சுதர்சன் ரெட்டி… அரசியலமைப்பை காப்பதில் ஒருமித்த எண்ணம் கொண்டவர்!” – ராகுல் காந்தி

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதல்வர் ஸ்டாலின் 50-வது திருமண நாள்: மனைவி துர்காவுடன் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்
    • AIIMS- பயிற்சி பெற்ற மருத்துவர் பரிந்துரைக்கிறார்: இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 புளித்த பானங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி: ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி அறிவிப்பு
    • கோல்ட் காபி வெர்சஸ் சூடான காபி: நீங்கள் குடிக்க வேண்டும் – இந்தியாவின் டைம்ஸ்
    • திருபுவனம் பாமக ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.