Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காம் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு
    தேசியம்

    பஹல்காம் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது.

    முன்னதாக, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி பாதுகாப்பு படைகளின் தலைவர் அணில் சவுகான் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று விளக்கியிருந்தார். இந்நிலையில், அதற்கு அடுத்தநாளில் பிரதமருடனான இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    அதேபோல், பஹல்காம் தாக்குதல் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு மூன்று நாட்களுக்கு பின்பு இன்றைய சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

    நடந்தது என்ன? ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்.22-ம் தேதி நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பின்பு நடந்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்புகள்’ – இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் முகாமிட்டு தேசிய புலனாய்வு முகமை தாக்குதல் குறித்த ஆதாரங்களைத் தேடி வருகின்றனர். கூடுதலாக இந்திய ராணுவம் எச்சரிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை அழிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடத்தி வருகின்றனர்.

    இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏப்.23-ம் தேதி பாதுகாப்பு அமைச்சகத்துக்கான குழு (சிசிஎஸ்) தாக்குதல் தொடர்பான நடவடிக்கை எடுக்க அதன் கூட்டத்தைக் கூட்டியது. சிசிஎஸ் அளித்த விளக்கத்தில், இந்த தாக்குதலில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    யூனியன் பிரதேசத்தில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு நோக்கிய ஜம்மு காஷ்மீரின் நிலையான நடைமுறைக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள தரை, கடல் மற்றும் வான் படைகளின் ஆலோசகர்களை திரும்பப் பெற்றுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது…’ – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு

    June 29, 2025
    தேசியம்

    ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

    June 29, 2025
    தேசியம்

    அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    June 29, 2025
    தேசியம்

    செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை: தொலை தொடர்பு துறை பரிசோதனை

    June 29, 2025
    தேசியம்

    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
    • ஜப்பானின் நீண்ட ஆயுள் என்று அழைக்கப்படும் ஓகிமியிடமிருந்து கற்றுக்கொள்ள வாழ்க்கை மாறும் பாடங்கள்
    • ‘பெரிய தவறு’: ‘பெரிய அழகான’ வரி மசோதாவை நிராகரித்ததற்காக டிரம்ப் செனட்டர் டில்லிஸைப் பின் தொடர்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி
    • தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.