Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு
    உலகம்

    ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு

    adminBy adminApril 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுக்கலின் பல நகரங்களில் இன்று பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது என்றும், மின்சாரமின்றி பல லட்சம் மக்கள் தவித்த நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நகரங்களில் மாட்ரிட், பார்சிலோனா, லிஸ்போன், செவில்லே மற்றும் போர்டோ போன்ற முக்கியமான தொழில் நகரங்களும் அடங்கும். மின்வெட்டு காரணமாக ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஸ்பெயின் போக்குவரத்து ஆணையமான டிஜிடி, மின்வெட்டு காரணமாக மக்கள் தங்களின் கார்களை அவசியமின்றி பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் வேலை செய்யாததால், மாட்ரிட் நகரின் மையப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் வானொலி தெரிவித்தது.

    இந்த நிலையில், அரசும், மின் இணைப்பு நிறுவனமான ரெட் எலக்ட்ரிகா மின் தடைக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், மாற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. ஐரோப்பா முழுவதும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்பெயினின் பொது ஒளிபரப்புச் சேவையான ஆர்டிவிஇ, “உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு பல்வேறு பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் செய்தி அறை, மாட்ரிட்டில் உள்ள ஸ்பெயின் நாடாளுமன்றம், நாட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் இருளில் மூழ்கின என்று தெரிவித்துள்ளது. பார்சிலோனா மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாட்ஸ்-அப் அரட்டைகளில் மின்வெட்டு குறித்து தகவல் பகிர்ந்திருந்தனர்.

    சுமார் 10.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட போர்ச்சுக்கலின் தலைநகர் லிஸ்போன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களுடன், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டன. போர்ச்சுக்கல்லின் மின் விநியோக நிறுவனமான இ-ரிடஸ், ஐரோப்பாவின் மின் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    லண்டனில் உள்ள இந்திய உணவகம் மீது ஆர்சன் தாக்குதல்: டீனேஜர், மனிதன் வைத்திருந்தான்; காயமடைந்த இரண்டு பேர் – இந்தியாவின் காலங்கள்

    August 24, 2025
    உலகம்

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளார்: உக்ரைன் தூதர் தகவல்

    August 24, 2025
    உலகம்

    ‘தூய வாய்ப்பு’: சிங்கப்பூரில் பிகாமிக்காக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூல மனிதர்; இரண்டாவது மனைவியின் பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அம்பலப்படுத்தப்பட்டது – இந்தியாவின் டைம்ஸ்

    August 24, 2025
    உலகம்

    இந்திய வான்பரப்பில் பாக். விமானம் பறக்க தடை நீட்டிப்பு

    August 24, 2025
    உலகம்

    அமெரிக்காவில் பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

    August 24, 2025
    உலகம்

    ‘காரின் கீழ் புதைக்கப்பட்டது’: நியூயார்க் டூர் பஸ் விபத்தில் கொல்லப்பட்ட 5 பேரில் இந்தியர்; தப்பியவர்கள் சோதனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமித் ஷாவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்: தமிழக பாஜக வலியுறுத்தல்
    • தூள் எலக்ட்ரோலைட் பானங்களின் மறைக்கப்பட்ட அபாயங்கள்: வேகமான நீரேற்றம் அல்லது தீங்கு விளைவிக்கும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘மதராஸி’ ட்ரெய்லர் எப்படி? –  ஏ.ஆர்.முருகதாஸின் மற்றொரு ‘கஜினியா’?
    • தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் தலைவரும், முதல்வர் வேட்பாளரும் பழனிசாமி தான்: நயினார் நாகேந்திரன் 
    • இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அடிக்கடி தோன்றும் 3 அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.