Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?’ – பாஜகவை சாடும் காங். எம்எல்ஏ
    தேசியம்

    ‘பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?’ – பாஜகவை சாடும் காங். எம்எல்ஏ

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?’ – பாஜகவை சாடும் காங். எம்எல்ஏ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜக அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு அவர்களைக் கொன்றதாக பாஜக கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?” என மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், செய்தி நிறுவனம் ஒன்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. அதாவது, போருக்கு எதிரான குரல்கள் என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்தை பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது.

    இந்நிலையில், மற்றொரு மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார் இது குறித்து கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களிடம் அவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு கொன்றதாக பாஜக கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?. சிலர் இது நடக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

    பயங்கரவாதிகளுக்கு சாதி அல்லது மதம் இல்லை. தவறு இழைத்தவர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இந்திய மக்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. முதலில் பாஜக இதை செய்ய வேண்டும், ஆனால் பாஜக அரசு பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்துவது பற்றிப் பேசுகிறது. அதைச் செய்ய 20 ஆண்டுகள் ஆகும்.” என்றார்.

    ‘பாகிஸ்தான் ஆதரவாளர்கள்’ – முன்னதாக, சித்தராமையாவின் கருத்து பாஜகவின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.. பாஜக எம்பி சம்பித் பத்ரா இது குறித்து கூறுகையில், “காங்கிரஸ் பாகிஸ்தான் மொழியில் பேசுகிறது. சித்தராமையாவை உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சி வெளியேற்ற வேண்டும்… ஆனால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் இதுதான் காங்கிரஸின் உண்மையான முகம்… ராகுல் காந்தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கான ஆதாரத்தைக் கோரினார். இன்று, ராகுல் காந்தி, சித்தராமையாவின் கருத்துகள் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. பாகிஸ்தான் அவர்களை தங்கள் ஆதரவாளர்களாகக் கருதுகிறது.” என்று சாடியிருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரேணுகாசுவாமி கொலை வழக்கு: ஜாமீன் ரத்தானதால் கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் கைது

    August 14, 2025
    தேசியம்

    தமிழகத்தின் 32 பேர் உட்பட 1,090 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்!

    August 14, 2025
    தேசியம்

    Bihar SIR: 65 லட்சம் வாக்காளர்கள் விவரத்தை நீக்கியதன் காரணத்துடன் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 14, 2025
    தேசியம்

    நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸின் தாஜா செய்யும் கொள்கையே காரணம்: யோகி ஆதித்யாநாத்

    August 14, 2025
    தேசியம்

    பிஹார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் அலர்ட்

    August 14, 2025
    தேசியம்

    கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து – உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹெர்பெஸ் வைரஸ் நரம்பியல் தாக்கத்தின் மூலம் மனநிலைக் கோளாறுகளைத் தூண்டுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரேணுகாசுவாமி கொலை வழக்கு: ஜாமீன் ரத்தானதால் கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் கைது
    • திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஆக.23-ல் தேரோட்டம்
    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி தடையை விலக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
    • புற்றுநோய் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது: முக்கிய அறிகுறிகள், பொதுவான இடங்கள் மற்றும் ஒரு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.