Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு புதுநாணயங்கள் பரிசளிப்பு
    ஆன்மீகம்

    மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு புதுநாணயங்கள் பரிசளிப்பு

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு புதுநாணயங்கள் பரிசளிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தேனி: மலையாள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கனிதரிசன வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு புத்தம் புது நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 2-ம் தேதி கொடியேற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைகள் நடைபெற்றது. உச்சநிகழ்வாக கடந்த 10-ம் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டையும், 11-ம் தேதி காலை ஐயப்பனுக்கு புனித நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா நிறைவடைந்து கொடிஇறக்கப்பட்டது. பின்பு மலையாள புத்தாண்டான விஷூ பண்டிகைக்கான வழிபாடு தொடர்ந்தது.

    இந்நாளில் பழங்கள், தானியங்களை சந்நிதானத்தில் வைத்து புத்தாண்டின் முதல்நாளில் இதனை தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக நேற்று(ஏப்.13) பெரியபாத்திரத்தில் மா, வெள்ளரிக்காய், தேங்காய், உலர்ந்த அரிசி, நெல், பலா உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், கண்ணாடி, காய்கறிகள் உள்ளிட்டவை பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டன.

    இன்னொரு வெள்ளிக் கிண்ணத்தில் ரூ.1,2,5,10,20 புதிய நாணயங்கள் நிரப்பப்பட்டு ஐயப்பன் முன்பு வைக்கப்பட்டன. பின்பு நேற்று இரவு ஹரிவராசனம் பாடலுக்குப் பிறகு நடை சாத்தப்பட்டன. புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன்ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி கோயில் நடையைத் திறந்து வைத்தார்.

    ஐயப்பன் முன்பு படைக்கப்பட்ட கனிகளை புத்தாண்டின் முதல்நாளில் பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு இவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்.பின்பு ஐயப்பன் முன்பு வைக்கப்பட்ட புதிய நாணயங்களை தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி ஆகியோர் பக்தர்களுக்கு வழங்கினர்.

    பக்தர்கள் கூறுகையில், புத்தாண்டின் முதல்பார்வையாக மங்களகரமான காட்சியான விஷூ கனியை தரிசிப்பது அந்த ஆண்டு முழுவதும் வளமான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் ஐயப்பன் முன்பு படைக்கப்பட்ட புதிய நாணயங்களை பெறுவதால் வருடம் முழுவதும் பணப்பிரச்சினையின்றி செல்வவளம் பெருகும்.

    இதற்காக இந்நாளில் தரிசனம் செய்ய வந்துள்ளோம் என்றனர். பின்பு வழக்கமான வழிபாடுகளுடன் மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கடந்த 1-ம் தேதி மாலை திறக்கப்பட்டு வரும் 18-ம் தேதி வரை தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலம்: காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    August 17, 2025
    ஆன்மீகம்

    கெங்கையம்மனுக்கு 5 லட்சத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

    August 16, 2025
    ஆன்மீகம்

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

    August 16, 2025
    ஆன்மீகம்

    மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு

    August 15, 2025
    ஆன்மீகம்

    திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஆக.23-ல் தேரோட்டம்

    August 14, 2025
    ஆன்மீகம்

    மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 
    • எதிர்மறை விமர்சனங்களால் ‘கூலி’ வசூல் குறையவில்லை: திருப்பூர் சுப்பிரமணியம்
    • சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விண்ணப்ப நடைமுறை, தகுதி விதிகளில் திருத்தம்
    • சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணை தடை கோரி அமைச்சர் பெரியசாமி மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
    • “யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை!” – பேரரசு வேதனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.