Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விவசாயிகள் தொழில்முனைவோராகவும் வணிகர்களாகவும் மாற வேண்டும்: ஜெகதீப் தன்கர்
    மாநிலம்

    விவசாயிகள் தொழில்முனைவோராகவும் வணிகர்களாகவும் மாற வேண்டும்: ஜெகதீப் தன்கர்

    adminBy adminApril 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விவசாயிகள் தொழில்முனைவோராகவும் வணிகர்களாகவும் மாற வேண்டும்: ஜெகதீப் தன்கர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழா அரங்கில், ‘பாரதத்துக்கான வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை 20.2 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் பாசன உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இந்தியா உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

    உணவுப் பற்றாக்குறையில் இருந்து உபரிக்கு மாறிய இந்தியாவின் பயணத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.

    இ-நாம் திட்டத்தில் 2 கோடி விவசாயிகளும், 2.5 லட்சம் வர்த்தகர்களும் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும். வேளாண் விளை பொருட்களின் சந்தை மிகப்பெரியது. மதிப்பு கூட்டுப் பொருட்கள் மூலம் தொழில் வளம் பெருகும்.

    மாணவர்களின் ஆராய்ச்சி விவசாயிகளுக்கு நேரடிப் பலன் தருவதாக இருக்க வேண்டும். இதற்கு அரசு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும். உர மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற வேளாண் பொருட்கள் கண்காட்சியை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில், வேளாண் பல்கலை. வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வேளாண் உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, பல்கலை. துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ்வேந்தன், டீன் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பள்ளி மாணவர்களிடம் நாட்டு வெடிகுண்டு: உரிய நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவை

    August 13, 2025
    மாநிலம்

    ‘வாக்குத் திருட்டு’ மற்றும் பிஹார் SIR-க்கு கண்டனம்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

    August 13, 2025
    மாநிலம்

    மீன்வளத் துறை சார்பில் மீன் இறங்குதளங்கள் உட்பட ரூ.177 கோடியில் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    August 13, 2025
    மாநிலம்

    2 தடங்களில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்: அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

    August 13, 2025
    மாநிலம்

    சுதந்திர தின தொடர் விடுமுறை: 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்
    • பள்ளி மாணவர்களிடம் நாட்டு வெடிகுண்டு: உரிய நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்
    • கைகள் மற்றும் கால்களில் காணக்கூடிய கல்லீரல் நோயின் அறிகுறிகள்
    • தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி உறுதி
    • வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.