
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய மருத்துவர் உமர் நபியின் வீடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை ஒரு கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விசாரணையில், அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி என்பது தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.

