அதனால், 100 வார்டுகளிலும் இரு கட்சி நிர்வாகிகளும், அதன் கவுன்சிலர்களும் திரைமறைவு அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். மேயர் இல்லாததால் அவரது இடத்தில் துணைமேயர் நாகராஜன் தங்கள் வார்டுகளில் வந்து மக்கள் குறை கேட்பது, ஆய்வு செய்வதையும் திமுக கவுன்சிலர்கள் விரும்பவில்லை. இந்த நேரத்தில் திமுகவுடன் மோதினால், அது சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி விடும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் அடக்கி வாசிக்கின்றனர்.
ஆனாலும், துணை மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் திரைமறைவு அரசியல் மோதல் அனைத்து நிலைகளிலும் நடந்து வருகிறது. அதன் காரணமாகவே, நேற்று முன்தினம் துணைமேயர் பங்கேற்ற ரூ.2,300 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தை பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

