பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களின் பாஜக தொண்டர்களுக்கு புது சக்தி கிடைத்திருக்கிறது. பாஜக தொண்டர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை. அவர்கள் மனது வைத்தால் எதையும் சாதிப்பார்கள்.
பிஹாரில் காட்டாட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. மேற்குவங்கத்தில் தற்போது நடைபெறும் காட்டாட்சியை மக்கள் அகற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் மாநில தேர்தல் வெற்றி,இந்த மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டி உள்ளார்.

