இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆந்திர அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் சேர்த்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேக் ரஷீத் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 5 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை தமிழக அணி விளையாடத் தொடங்கியது.

