
புனே: மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் நிதின் எஸ்.தர்மாவத். அவரது மகன் அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் சமூக வலைதளத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில், ‘‘பள்ளிகள் பயனற்றவை. தற்போது நள்ளிரவு 12 மணி ஆகிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் எனது மகன் ஹோம்வொர்க் பாடங்களை முடித்துவிட்டு ‘புராஜெக்ட்’ என்ற பெயரில் ஏதோ முட்டாள்தனமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

