
திருவனந்தபுரம்: பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் (இண்டியா கூட்டணி) இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தல் முடிவு இடதுசாரிகளுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

