
புதுடெல்லி: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் மத்திய அரசின் உதவியை அவர் கோரவுள்ளதாக தகவல்.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று டெல்லியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். “அமைச்சரவை மாற்றம் குறித்து எங்கள் அமைச்சர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை இன்று நான் சந்தித்திருக்க வேண்டும். பிஹார் தேர்தல் காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை. வரும் திங்கட்கிழமை அன்று அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

