இதேபோல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிஹார் எம்எல்சி அசோக் அகர்வாலும், கடிஹார் மாநகராட்சி மேயர் உஷா அகர்வாலும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மேலிடம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில பொறுப்பாளர் அர்விந்த் சர்மா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைமை மீது முன்னாள் எம்.பி.யான ஆர்.கே.சிங் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தார். இதைத் தொடர்ந்தே அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையைத் தொடர்ந்து ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

