சென்னை: சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தியதால், 3.12 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக சேவைக்கான நிபந்தனைகளின் அடிப்படையில் அம்பத்தூர், ஒரகடம் பகுதியில் உள்ள அன்னை ஆதரவற்றோர் இல்லத்துக்கு 3.12 ஏக்கர் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்தது.

