அந்த அறிக்கையில், தமிழக அரசின் சட்டத் திருத்தம் கல்வியை எந்த அளவுக்கு வணிகமயமாக்கும்? சமூகநீதியை எந்த அளவுக்கு அழிக்கும்? ஏழைகளிடமிருந்து உயர்கல்வி வாய்ப்புகளை எவ்வாறு தட்டிப் பறிக்கும்? என்பது குறித்தெல்லாம் அதில் விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அக்டோபர் 17ஆம் தேதி விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் அவசரமாக திமுக அரசு அதனை நிறைவேற்றியது.
திமுக அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக முதன்முதலில் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பிய குரல், தமிழகத்தின் கல்வியாளர்கள், பேராசிரியர் அமைப்புகள், சமூகநீதியாளர்கள் மற்றும் சில கட்சியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, அரசுக்கு எதிரான கொந்தளிப்பாக மாறியது.

