
புதுடெல்லி: பிஹார் தேர்தல் தோல்வியை அடுத்து, வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லாத கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் என்டிஏ (ஐஜத – பாஜக) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மெகா கூட்டணி (ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ்) படுதோல்வி அடைந்தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

