மதுரை: தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை எட்டும் வகையில், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உரு வாக்கிடவும், தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தகவல் தொழில்நுட்பச் சூழலை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இத்திட்டத்துக்கு மதுரை மாட்டுத்தாவணியில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

