ஓடுபாதையை நீட்டித் தால் மதுரையில் இருந்து நேரடி யாகவே விமானங்கள் சர்வதேச விமானநிலையங்களுக்கு இயக்கப்படும், மதுரையும் சர்வதேச விமானநிலையமாகி விடும் என தென் மாவட்ட தொழில் முனைவோர், பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த கால் நூற்றாண்டாக மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவைத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் வைக்கும் முக்கிய வாக்குறுதி, மதுரையை சர்வதேச விமானநிலையமாக மாற்றுவோம், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வோம் என்பதுதான்.
ஆனால், அதிமுக, திமுக எந்தக் கட்சியின் ஆட்சியிலும் மதுரை விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய இரு கட்சிகளின் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை என்றும் மதுரை விமானநிலையத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தூத்துக்குடி விமானநிலையமும், திருச்சி விமானநிலையமும் பாதிக்கப்படும் என்றும் அக்கட்சிகளின் தென் மாவட்ட, மத்திய மாவட்ட முக்கியப் பிரமுகர்கள் நினைப்பதாகக் கூறுகின்றனர்.

