சென்னை: ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது.
இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு – தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சார்பில் 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டரும், 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோவும் கோல் அடித்து அசத்தினர்.

