இந்நிலையில், அந்த வெடிபொருட்களுக்கு பைகள் தைப்பதற்காக நவ்காமில் உள்ள டெய்லர் முகமது ஷபி பரே (57) என்பவரை வெள்ளிக்கிழமை காலை போலீஸார் அழைத்து சென்றனர். இந்நிலையில், சாப்பிடுவதற்காக டெய்லர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மகள் ”வெளியில் கடும் குளிராக உள்ளது அப்பா. நீங்கள் வேலைக்கு போக வேண்டாம்” என்று கெஞ்சி அடம்பிடித்துள்ளார்.
அதற்கு டெய்லர் பரே ”சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்” என்று கூறி மகளை சமாதானப்படுத்திவிட்டு சென்றுள்ளார். ஆனால், விதியின் விளையாட்டு உயிரில்லாத அவர் உடல் மட்டும்தான் மறுநாள் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அப்பாவை பார்த்து மகள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

