இந்த நடவடிக்கை அமெரிக்காவில் பல வகை விசாக்களில் பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகள் உட்பட வெளிநாட்டினர் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்த விதிமுறைப்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு அனுமதி கிடைக்காது.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை துறை இயக்குநர் ஜோசப் எட்லோ கூறுகையில், “வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முன் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு அங்கீகாரம் காலாவதியாவதற்கு 180 நாட்களுக்கு முன்பே, பணி நீட்டிப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் பணியாற்றுவதை வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். உரிமையாக கருதக் கூடாது” என்றார்.

