பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவின் பசவேஸ்வரநகர் பகுதியை சேர்ந்த சிறுமிகள் சாரதா, சம்யுக்தா, சிறுவன் நசிகேதன் ஆகியோர் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக பள்ளியில் 3 பேருக்கும் அண்மையில் காகித பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 3 பேரும் ஒருமித்து முடிவு செய்தனர். இதற்காக எகோ வாலா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சிறுமி சாரதா தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மேலாளராக நசிகேதனும் துணை மேலாளராக சம்யுக்தாவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

