இதனிடையே இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன். ‘ரஜினி 173’ படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் என்பதால் அவரிடம் அந்த படத்தின் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கமல், “ரஜினி படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை சுந்தர்.சி அறிக்கையாக வெளியிட்டுவிட்டார். அது அவருடைய கருத்து.
நான் முதலீட்டாளன், எனது நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது. அதை தான் செய்து கொண்டிருக்கிறோம். ரஜினிக்கு பிடிக்கும் வரை கதைகள் கேட்டுக் கொண்டே இருப்போம். கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். புதிய அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிர்பாருங்கள்” என்று பதிலளித்தார்.

